பக்கம்:தரும தீபிகை 6.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2064 த ரு ம தீ பி. கை 805. ஆண்மை அடியாய் அமைந்த பெருவீரம் ஏண்மையுடன் ஒருவன் எய்திகின்ருல்-மாண்மைமிகப் புெம் றிந்தப் பேருலகம் பேணி மகிழ்ந்தேத்த உற்றுத் திகழ்வன் உயர்ந்து. (டு) - _ _ இ-ன். உயர்ந்த ஆண்மை வழியே சிறந்த வீரம் பிறந்து வந்துள் ஆனது: அக்க அதிசய இரத்தை புடையவன் உலகம் முழுவதும் உவுந்து, வியந்து புகழ்ந்து போற்ற உயர்ந்து திகழ்வான் என் க. பிறந்த மக்கள் எல்லாரும் உலகில் சிறந்த புகழுடையராப் உயர்ந்து விளங்குவதில்லை. அரிய நீர்மைகளோடு பெரிய செயல் களைச் செய்தவரே பெரும் புகழாளராய் விளங்கி வருகின்ருர். உயர்ந்த நிலைகளைக் கண்டபோது மாக்கர் உள்ளம் உ வ ங் து புகழ்ந்து பேசுகின்ருர், அவ்வுரை வழிமுறையே புகழ் ஒளியாய் நிலவுகின்றது. விரம் கொடை நீதிகளால் விளைந்துவரும் புகழ் ஆய்ாண்டும் வியஞன நிலையில் துலங்கி வருகிறது.

  • இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இக்கமிழ் நாட்டில் ஒரு முதியவள் இருந்தாள். அவளுடைய த க் ைத போரில் மாண்டு போனன்; மூன்று ஆண்டுகள் கழிந்தபின் மீண்டும் நாட்டில் போர் மூண்டது; தன் அர சனுக்கு உதவியாகத் தனது கணவன் போருக்குப் போனன்; அங்கே அருங் திறலோடு அட ல்ர்ன்மை புரிந்தான்; எதிரிகள் பலரை வென்ருன்; முடிவில் இறந்து விழுந்தான். பெற்ற தங்தையும் கொண்ட கணவனும் -உம்ற கர்ட்டின் உரிமைக்காக உயிர் துறந்தனர் என்று பெருமித ம்ோப் அவள் உறுதி பூண்டிருந்தாள்; மறுபடியும் போர் சேர்ந் தது; அக்கிழவிக்கு ஒரே ஒரு மகன் கான் இருக்கான்; அவனுக்கு அப்பொழுது வயது இருபத்தொன்று கடந்து கொண்டிருந்தது. போர்ப் பறை கேட்ட்தும் தன் அருமை மகனை உரிமையோடு போர்க் கோலம் செய்து போர்க் களத்துக்கு அனுப்பினுள். அவளுடைய மன-நிலையையும் வீரப்பான்மையையும் வியந்து நாடும் நகர மும், புகழ்ந்து போற்றின. அயலே வரும் பாடலில் -அவளது. சரித நிலை மருவியுளது. கருதிக் கானுக.

கெடுக் சிங்தை கடிது இவள் துணிவே மூதில் மகளிர் ஆதல் தகுமே;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/241&oldid=1327633" இலிருந்து மீள்விக்கப்பட்டது