பக்கம்:தரும தீபிகை 6.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 2067 0ே6. தானம் தயைகல்வி தன்னையுணர் ஞானமென ஆனவகை வீரம் அமைவுறினும்-மானமிகு போர்வீரம் ஒன்றே புகழ்வீரம்: அன்னதே கேர்வீரம் ஆகும் கிலேத்து. (சு) இ-ள் தான வீரம், கயா வீரம், கல்வி வீரம், ஞான வீரம் எனப் பலவகை விரங்கள் உள. எனினும் மானம் மிகுந்த போர்விரமே யாண்டும் புகழ் விரமாப் உயர்ந்து நேரேநிலைத்து நிலவுகின்றது. இது, வியனை வீரத்தின் நயன் அறிய வந்தது குன நீர்மைகள் வீரத்தால் மனம் அடைந்து வருகின் றன. விரம் இல்லையானல் சிறந்த தன்மைகளும் சிதைந்து படு கின்றன. மரத்துக்கு ஆணிவேர் போல் மனிதனுக்கு வீரம் உறுதி பயங் தள்ளது. ஊக்கம் உறுதி திடம் திண்மை தைரியம் துணிவு என்பன வீரத்தின் கிளைகளாய் விரிந்து பரந்துள்ளன. தான் உறுதியாக் கைக்கொண்ட நல்ல ஒழுக்கங்களை எவ் வழியும் செவ்வையாப் பாதுகாத்து நிற்பவர் சிறந்த சில விர ாாப் உயர்ந்து திகழ்கின்ருர். பிறர் மனை நோக்காமை பேராண் மை என்று தேவர் கூறியிருத்தலால் எக பத்தினி விரதம் அரிய பெரிய வீரம் என்பது தெரிய வந்தது. பேரின்ப சாதனங்க ளாய்ப் பெருமை பெற்றுள்ள தவம் யோகம் ஞானம் மோனம் வைராக்கியம் என்பன விர நீர்மையின் சாரங்களா யுள்ளன. தனது வண்மை நிலையில் யாண்டும் திண்மையாயிருந்து வங்கமையால் கன்னன் தானவீரன் என வானமும் வையமும் வாழ்த்த கின்ருன். இவனுடைய கவச குண்டலங்களைக் கவர்ந்து கொள்ள விழைந்து மாயன் இந்திரனே, ஏவினன். அவன் ஒர் முதிய வேதியஞப் மருவி வந்தான். வஞ்சமாய் வந்த அவனை இவன் நெஞ்சம் உவந்து உபசரித்து, பெரியீர்! யாது வேண் டும்?' என்ருன். கருதி வேண்டியதைத் தர முடியுமா? என்று அவன் கர வோடு கேட்டான், இவன் உறுதியாய்க் கருகிறேன் என்ருன். இவனது உயிர்நிலையமாயிருந்த அந்த அணிகளையே அவன் கேட்டான், உடனே கொடுத்தான்; அங்ங்னம் கொடுக் கும்போது ஆகாயவாணி கடுத்தது. 'வந்துள்ளவன் இந்திரன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/244&oldid=1327636" இலிருந்து மீள்விக்கப்பட்டது