பக்கம்:தரும தீபிகை 6.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2080 த ரு ம தீ பி ைக பிரமாவிடம் அமைந்துளது. அரிய கருமங்களைச் செய்து முடிக் கும் உறுதி உயர்ந்த வீரத்தின் பகுதியாய் விளைந்து வருகின்றது. புலன் ஐக்தம் வென்ருன்தன் விரமே வீரம். (ஒளவையார்) என்றது அந்த வெற்றி நிலையை உய்த்துணர வந்தது. வீரத் தை மேலோர் எவ்வாறு கருதியுள்ளனர் என்பதைக் காவியங் கள் ஒவியங்களாய்க் காட்டி நிற்கின்றன. கருத்துக்கள் கூர்ந்து சிந்திக்கக் கக்கன. கருமமும் கருமமும் வீரத்தால் வருகின்றன. களைகளைக் களைந்து பயிர்களை வளர்ப்பது போல் புன்மைகளை நீக்கி நன்மைகளைக் காக்க நேர்ந்த அரசனுக்கு உறுதியூக்கமாய் வீரம் உதவுகின்றது. கரும நீதிகளைத் திடமாய்க் காத்து வரும் கருமமே வீரம் என வெளியே தெளிவாய் விளங்கி யுள்ளது. வீரம். அறங்கெ டாமல் கின்று அடலமர் புரிவதே வீரம்; மறந்தும் புன்மையும் வஞ்சமும் மருவிடா ததுதான்; சிறந்த போரிடை இறந்தவர் தேவராய்ச் சிறந்து பிறந்த பேறெலாம் பெற்றவ ராய்நலம் பெறுவார் (1) வீர நிலை. வீரம் உள்ளவர் தருமமும் மெய்ம்மையும் மேவி ஈரம் உள்ளவ ராயிதம் செய்குவர்; விரம் கோர வன்குணம் அன்று; அது தெய்வவான் குணமே, சீர் இராமனே, விசயனே கினேந்துண்மை தெளிமின்! (2, வீர மேன்மை. உலகில் உள்ளகல் உயிர்த்தொகை எவற்றினும் உயர்ந்து திலக மாய்கின்று தேசொடு தெவ்வரை அடக்கி அலகில் சீருடன் ஆளு றும் அரசனுக்கு உயிராய் நிலவி யுள்ளநன் னிர்மையே வீரம் என்று அறிக. (3) (விரபாண்டியம) விரத்தின் நிலைமை கலைமை நீர்மை சீர்மைகளை இவை நன்கு †† ணர்த்தி யுள்ளன. பொருள் நயங்களைக் கூர்மையா ஒர்ந்து கருமவீரங்களின் மருமங்களைக் தேர்ந்து கொள்ள வேண்டும். உலகநலம் கருதியே வீரம் நேரே ஒளி புரிந்து வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/257&oldid=1327651" இலிருந்து மீள்விக்கப்பட்டது