பக்கம்:தரும தீபிகை 6.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2094. த ரும தி பி ைக உள்ள புலையையும் இங்கே ஒருங்கே உணர்ந்து கொள்கிருேம். கொடுப்பவன் குலமகனப் உயர்ந்தான்; கொடாதவன் இழி மகளுய்த் தாழ்ந்தான். இழிவு நேராமல் ஈக்க அளவு அவன் விழுமியோனுப் உயர்ந்து மேலே விளங்கி வருகிருன், 'இல்லது கோக்கி இளிவரவு கூருமுன் நல்லது வெஃகி வினேசெய்வார்.” (பரிபாடல்,10) வறியவர் வாய் திறந்து கேளா முன்னமே அவரது நிலைமை யை உணர்ந்து விரைந்து விழைந்து உதவி புரிவார் என உயர்க்க மேன்மக்களுடைய நீர்மையை இ.த உணர்த்தியுள்ளது. இவ் வாறு உதவுகின்றவரை உ ல க ம் எவ்வாறு உவந்து புகழ்ந்து வரும்? இதனை ஈண்டு உணர்ந்து கொள்ள வேண்டும். எளி யவர்க்கு இரங்கி ஈ ப வ ர் விழுமிய மேலோராப் ஒளிமிகுந்து வருகிரு.ர். உபகார நீர்மை உயர் மகிமையாய் மிளிர்கிறது. தான் ஈட்டியபொருளை நீட்டிஉதவுகிறவன் நீண்ட புகழை அடைந்து கொள்கிருன்; தி லை யா ன அக்கீர்த்தி கலையான வரையே சார்ந்து நிலவுகிறது. இட்டுவாழ்வகே இனிய வாழ்வாம். அட்டுநீர் அருவிக் குன்றத்து அல்லது வயிரம் தோன்கு; குட்டநீர்க் குளத்தின் அல்லால் குப்பைமேல் குவளே தவா: விட்டுர்ே வினவிக் கேள் மின் விழுத்தகை யவர்கள் அல்லால் பட்டது பகுத்துண்பார் இப் பார்மிசை இல்லே கண்டீர்! (1) கருங்கடல் பிறப்பின் அல்லால் வலம்புரி காணுங் காலேப் பெருங்குளத்து என்றும் தோன்ரு பிறைஅதற் பினேயனிரே! அருங்கொடைத் தானம் ஆய்ந்த அருந்தவம் தெரியின் மண் மேல் மருங்குடை யவர்கட்கு அல்லால் மற்றையர்க்கு ஆவதுஉண்டே? (2) (சீவக சிந்தாமணி) பகுத்து உண்டலும், கொடையும் தோன்றுகின்ற இடங் களை இவை நயமாக் காட்டியுள்ளன. கவிகளைக் கருதியுனர்க்க சுவைகளை நுகர்ந்து கொள்ளவேண்டும். அருவிபாய்கிற பெரிய மலைகளிலேதான் அரிய வயிரங்கள் தோன்றும்; நீர் கிமைக்க ஏரி யிலேதான் சீரிய குவளை மலர்கள் பூக்கும்; கருங்கடலிலேதான் வலம்புரிச் ச ங் கு க ள் பிறக்கும்; அது போல் கொடையும் தவமும் உயர்க்க குல மக்களிடையேதான் நலமான நிலையில் உளவாம் எனச் சீவக மன்னன் இவ்வாறு கூறியுள்ளான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/271&oldid=1327666" இலிருந்து மீள்விக்கப்பட்டது