82. கொடை 2 113 சிறந்த பண்பாடுகள் நிறைக்க உயர்க்க மேலோர்களின் நிலையை இது உணர்த்தியுள்ளத. எ வ்வழியும் செவ்வையான இனிய நீர் மைகளோடு வாழ வேண்டும் என மனித சமுதாயத்துக்கு ஒரு போதனையை இளம்பெருவழுதி என்னும் மன்னன் இன்னவாறு உளம் கனிந்து நன்னயமாய் வரைந்து மொழிந்துள்ளான். அரிய தெய்வ அமுதம் பெறினும் ே தனியே உண்ணுகே; பிறர்க்குப் பகுங்து கொடு; முனிவு இன்றி இனியளுப் கில்; பிற ரது துயரை நீக்க ஆனவரையும் அவர்க்கு உதவி செய்; புகழை விரைந்து கேடு; பழியை இகழ்ந்த விடு; அயர்வு நீங்கி உயர்வில் ஒங்குக; கனக்கு என்று குறுகிய நோக்கோடு முயலாமல் பிறர் நலமுறப் பேணி முயன்று பெருகி வாழ்; இவ்வாறு வாழின் நீ புண்ணிய மூர்த்தியாப்ப் பொலிக்க விண்ணும் மண்னும் வியந்து போற்ற விளங்குவாய்! என்.று விளக்கியிருக்கும் இக் கவியின் சுவையைக் கருதியுணர்ந்து உளங்கொண்டு நுகர்ந்து உறுதி யோடு ஒழுகிவரின் விழுமிய மேன்மைகள் கெழுமி வரும். வானம் கைம்மாறு கருதாமல் உலகிற்கு மழையைப் பொழிகிறது; அதுபோல் உதவி புரிபவர் வானவராய் உயர்ந்து திகழ்கின்ருர். செய்யும் இகம் தெய்வ அமுதமா உ யப்தி புரிகிறது. ஈகையால் உயிர்கள் உவகைபுறுகின்றன; சீவர்களுடைய அந்த உள்ளக் களிப்பு கருமமாய்ப் பெருகி ஈந்தவனை நோக்கி வருகின்றன; வரவே இருமையினும் இன்பமூர்த்தியா ப் அவன் மருவி மகிழ்கின்றன். அரிய சுகம் இனிய உதவியில் விளைகிறது. ஈந்து வந்தார் பேரின்பம் சேர்ந்து உவந்தார் என்றது ஈகை யால் விளையும் மகிமை மாண் புகளையும் இன்ப நிலை அ ளையும் ஒருங்கே ஒர்ந்து உணர்ந்து கொள்ள வந்தது. பிறர் உவந்து வர ஒம்பி வருபவன் உயர்ந்த பதவியை விரைந்து அடைந்து கொள் கிருன். துயர் நீங்க உதவுதலால் உயிர் ஒங்கி உயர்கிறது. இரங்கி உதவின் இமையோர் இறங்கி வரம்பெற வைப்பர் வளமாய்---உரம்பெற்றும் ஈயா தொழியின் இருமை எதிரிழந்து பேயா யிழிவர் பிறழ்ந்து. கருணையோடு உயிர்களைப் பேணிச் சாதக்களுக்கு உண்டி கொடுத்து வரின் அந்த உபகாரியைத் தேவர்கள் கண்டு மகிழ் 265
பக்கம்:தரும தீபிகை 6.pdf/290
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை