பக்கம்:தரும தீபிகை 6.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 116 த ரு ம கீ பி. கை ஈயாதவர் இழிவுறுவர் என்பதை காப்வாழ்வு நன்கு விளக் கியுள்ளது. தாம் உண்ணுவதை விடப் பிறர்க்கு ஊட்டுவதையே மேலாக எண்ணி பேலோர் பொருள் ஈட்ட முயல்வர். இல் என இரந்தோர்க்கு ஒன் அ ஈயாமை இழிவு எனக் கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள். (கலித்தொகை, 2) காடு மலைகளைக் கடந்து போய் வருந்திப் பொருள் ஈட்டி வருவது எளியவர்க்கு ஈயவேயாம் என ஒரு குலப கன் கருதி யிருப்பதை இது காட்டியுள்ளது பிறர்க்கு உதவி புரிய எண்ணு கிறவன் புண்ணிய நீர னுப்ப் பொலித்து உயர்ந்து திகழ்கிருன். சிறந்த புகழையும் உயர்ந்த இன்பத்தையும் ஈகை தந்தருளு தலால் அதனை மேலோர் சாலவும் உவந்து புகழ்ந்து வருகின் ருர். மாவலி பெரிய கொடை வள்ளல். பிரகலாதன் பேரன். உயர்ந்த சக்கர வர்த்தியாயப் உலகம் முழுவதையும் ஒருங்கே ஆண்டு வந்தான்; இவனுடைய ஈகை நிலையை வியந்து திருமால் ஒரு வாமனனப் வந்து இவனிடம் மூவடி மண் தானம் கேட் டான். இவன் உவந்து கக்கான்; அவ்வாறு கருங்கால் மந்திரியும் குருவுமாயிருந்த சுக்கிராச்சாரியார் கடுத்தார். அரசர் பெரும! வந்துள்ளவன் திருமால்; வானவர்க்காகக் கானம் கேட்க வந்தி ருக்கிருன்; தந்திரமாய் வஞ்சனை புரிய வந்திருக்கலால் நீ யாதும் தரவே கூடாது' என்று கடுத்து நிறுத்தினர். அடுத்து நின்று அவர் கடுத்தபோது இவன் அவரைக் கடுத்து மொழிந்த கருதிய படியே கொடுத்து மகிழ்க்கான். உள்ளம் தணிந்து இவன் உரைத்த மொழிகளைக் கேட்டு மாலும் மகிழ்ச்சி மீக்கூர்ந்தார். வெள்ளியை ஆதல் விளம்பினே மேலோர் வள்ளியர் ஆக வளங்குவ தல்லால் எள்ளுவ என் சில இன்னுயிர் ஏனும் கொள்ளுதல் தீது, கொடுப்பது கன் ருல். (இராமாயணம்) கொடையில் மாவலி மன்னன் கொண்டுள்ள பிரியமும் உறுதியும் இவ்வுரைகளால் நன்கு தெரியலாம். இன் உயிர் ஏனும் கொடுப்பது கன்று; கொள்ளுதல் தீது என்ற கல்ை இவனுடைய வண்மையும் திண்மையும் உண்மையும் உணர வந்தன. கன் கொடையால் என்றும் அழியாத புகழையும் அதிசய ஆனந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/293&oldid=1327689" இலிருந்து மீள்விக்கப்பட்டது