பக்கம்:தரும தீபிகை 6.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2122 த ரும தீ பி ைக பரப்புர்ே வையகத்துப் பல்லுயிர்கட் கெல்லாம் இரப்பாரில் வள்ளல்களும் இல்லே-இரப்பவர் இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும் தம்மைத் தலைப்படுத்த லால். (அறநெறிச்சாரம், 220) கொடுப்போரையே வள்ளல் என உலகம் சொல்லி வருகிறது; கொள்வோரே உண்மையான நல்ல வள்ளல்கள்; அது எவ்வாறு? எனின், தமக்குச் சிறிது உபகாரம் செய்தவர்க்கு இம்மையிலே நிலையான புகழையும் மறுமையிலே கலையான கதியையும் கொடுத் தலால் என்க. முனைப் பாடியார் என்னும் முனிவர் இரப்பாரின் ஈகை, நிலையைக் குறித்து இப்படி வியப்பாக விளக்கியிருக்கிரு.ர். வறிய இரவலரைப் பெரிய புரவலர் எ ன்றது உரிய உண்மையை உணர வந்தது. அல்லைான செல்வர்க்கு நல்லகீர்த்தியையும் இன் பங்களையும் நல்குதலால் அவரது உபகார கிலே உயர்தரமாயது. இரப்போரைக் கண்டால் எள்ளி இகழாதே; உனக்குப் புகழும் புண்ணியமும் கொடுக்க வந்த வள்ளல்கள் என்று எண்ணி அவருக்கு எவ்வழியும் ஈத்தருள் எனத் தன் மகனை நோக்கி ஒரு மன்னன் முன்னம் சொன்னதும் ஈண்டு எண்ணி யுனரவுரியது. உண்மை தெளிய தன்மை நன்கு விளைகிறது. இல்லைஎன வந்தவருக் கீந்தருளென் அறுன்னிடம்கான் சொல்லவில்லை ஒன்றுதான் சொல்லுகின்றேன்-நல்லவளுய் உன்னுயிரை இன்பமுற ஒம்புவதே எவ்வழியும் மன்னுயிரை ஓம்பல் மதி பிற வுயிர்களுக்கு ஆதரவாப் உதவி செய்கிறவன் தன் உயிர்க்கே மருமமாய் இன்பம் செய்தவனகிருன் என இது விசய மாயுணர்த்தியுள்ளது. சொல்லின் சுவையையும் பொருள் ஈயங் களையும் உள்ளம் கூர்ந்து ஒர்க் து உணர்ந்து கொள்ள வேண்டும். The man who ignores self in a ministry of mercy discovers life indeed. (living) தன்னை மறந்து பிறர்க்கு இரங்கி உதவுகிற மனிதன் தான் உண்மையான உயிர் வாழ்வைக் காணுகிருன் என்னும் இது இங்கே காணவுரியது. அருள் சுரங்க உதவி அரிய சுகமாகிறது. "" ~ , 조: - T T" " - " . எளியவர்க்கு அளி செய்து கொடு அதல்ை ஒளியும் இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/299&oldid=1327696" இலிருந்து மீள்விக்கப்பட்டது