82. கொடை 2125 வறுமை சேர்ந்தால் ஏதேனும் ஒரு தொழிலைச் செய்து பசியைப் போக்கு யாரிடமும் எதையும் கேளாதே; உழைத்து வாழ்வதே எவ்வழியும் உத்தமம். உழையாமல் ஒதுங்கிப் பிழை யாக இரவில் புகின் அது பழியாகவே முடியும். பிறர் வலிந்து வந்து கொடுத்தாலும் வாங்காதே; அவ்வாறு ஏலாது நிற்பின் மேலான நிலையை நீ விரைந்து அடைந்து உயர்ந்து திகழ்வாய். கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று. (புறம், 204) ஈவது கன்று; ஈயாமை திது. (சிறு பஞ்ச மூலம், 101) கொள்ளுதல் இது கொடுப்பது நன்று. (இராமா வேள்வி 29) இவை இங்கே சிந்திக்கத்தக்கன. கொடுப்பது நல்லது; அத ல்ை பெருமையும் இன்பமும் பெருகி வரும் ஆதலால் அதனையே மருவி வாழுக. கொள்ளுவது இழிவு; அதனை எள்ளி விலகுக. “To give should be our pleasure, but to receive, our shame.” (Goldsmith) ' கொடுப்பதை நாம் இன்பமாக் கொள்ள வேண்டும்; கொள்வதை வெட்கிக் கள்ள வேண்டும்' என்னும் இது இங்கே கன்கு உணரத்தக்கது. மனித சமுதாயத்தில் நல்லது பெருகி வர வும், அல்லது அருகி மறையவுமே பெரியோர்கருதிவருகின்றனர். இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. கொடை இருமையும் பெருமை தரும். அரசனுக்கு அது அதிசய மகிமையாம். கோடியில் ஒருவன் கொடையாளி ஆகிருன். கொடையால் புகழும் புண்ணியமும் உளவாம். கொடுத்து வந்த கையே கோல்ஏக்தி ஆளுகிறது. கொடையாளியை உலகம் உவந்து போற்றுகிறது. கொடுப்பவன் விரன்; கொடாதவன் பேடி. -- பொருளேக் கொடுப்பவன் புகழ் இன் பங்களை அடைகிருன். கொடாகவன் பழி துயரங்களில் படிகின்ருன். கொடையாளன் புகழோடு உயர்கதி பெறுகிருன். அஉ-வது கொடை முற்றிற்று. لا يصصص
பக்கம்:தரும தீபிகை 6.pdf/302
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை