2520 த ரும தீ பி. கை 947. உன்னை மறந்தாய் உலகமெலாம் ஒடியே என்னமோ தேடி இனைகின்ருய்-உன்னேே ஒர்ந்து தெளிந்தால் உலவாத பேரின்பம் நேர்ந்து கிறையும் கினே. (எ) இ-ள். உனது உண்மை நிலையை உணர்ந்து கொள்ளாமல் மறந்து விட்டு உலகம் எங்கும் பறந்து திரிந்து பலவும் தேடி வருந்தி யுழலுகின்ருப்; உன்னை நீ ஒர்ந்து தெளிந்தால் பேரின்பம் உன் எதிரே பெருகி வரும்; அதனை மருவி மகிழ்க என்பதாம். நான் நீ அவன் என்பன முறையே தன்மை முன்னிலை படர்க்கைகளை உணர்த்தி வருகின்றன. தன்னைக் குறிக்கும் போது தனி மனிதன் நான் என்று சொல்லி வருவது இயல்பா யுள்ளது. நான் என்பது எதை? கை கால் முதலிய அவயவங் களையோ, உடலையோ அது குறிக்கவில்லை என்று தெரிகின்றது. உடலுள் இருக்கும் உயிரே நான் என்னும் சொல்லுக்குப் பொரு ளாயது. யான் எனது என வருவன அகமும் புறமும் மருவின. உயிர் i என்றும் அழிவில்லாதது; அறிவு மிக வுடையது; ஆனந்த கிலேயது. ஆகவே சத்து சித்து ஆனந்தம் என யாண்டும் கிறைந்திருக்கும் அந்த ஆதிமூலப் பொருளின் ஞாதி என்பது நன்கு தெரிய வந்தது. பரப்பிரமமாகிய பெரிய சோதியிலிருந்து பிரிந்த சிறிய ஒளித் துளியே சீ வ ன் என வெளிப்பட்டுளது. அனு முதலிய சில பெயர்களால் பேசப்படுகிறது. யாவும் காரணக் குறிகளாய்ப் ೬b 6ರಶT நிலையில் அமைந்துள்ளன. உயிர் -- உயிர்த்தலேயுடையது. சிவன் -- சீவித்து வருவது. சேதனன் -- அறிவு நலம் அமைந்தது. LIలిF - பாசத்தால் பற்றப்படுவது. புற்கலன் - மேன்மை மிக்கது. அ இவ -- நுண்ணிய கிலேயது. ஆன்மா -- வியாபகமானது. கூத்தன் - கூத்தாடிபோல்வது. உடல் இயங்கி வருவதைக் கண்டுதான் உள்ளே ஒரு உயிர் உண்டு என்று உணர்ந்து கொள்கிருேம். நேரே கண்ணுக்குத்
பக்கம்:தரும தீபிகை 7.pdf/211
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை