பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104


உருகியோடும் தார் ரஸ்தாவில், நிதி மிகுந்தவர்கள் நீதி மறந்து நிர்மாணிக்கும் இந்திர லோகத்தில், ஜனசமுத்திரத்தில் பெருங்காயங்களாகக் கரைக்கப்படும் 'பிரச்னை'க் கும்பலில், ஏன், சட்டம் மதிக்கப்படாமல் மிதிபடும் மூலை முடுக்கு ஒவ்வொன்றிலும் 'நீக்கமற நிறைந்'திருக்கும் 'சர்வ வியாபி' யல்லவா இந்தத் தெய்வம்!

புதிய துப்பறியும் ஏஜண்டுகளான 'போலீஸ் நாய்கள்' தாம் இந்தத் தெய்வ மனிதன் பேரில் உண்மையான அனுதாபம் காட்டுகின்றனவென்றால் நீங்கள் நம்பவா போகின்றீர்கள்?

—*—


2. வாழ்க்கையே ஒரு 'காலி ப்ரூப்!'

உங்களுக்குத் தலையெழுத்து என்ற வார்த்தையில் நம்பிக்கை உண்டா? அப்படியென்றால், தன் தலையெழுத்தைச் சரிவர எழுதிக் கொள்ளத் தவறிப் போன, அல்லது மறந்து விட்ட 'அவன்' பேரில் நீங்கள் அனுதாபப் படத்தான் செய்வீர்கள்.

குனித்த புருவம் இல்லை; குழி விழுந்த கண்கள் உண்டு. கொவ்வைச் செவ்வாய் இல்லை; வெற்றிலைக் காவி படிந்த உலர்த்த உதடுகள் உண்டு. பனித்த சடைக்கு 'மேக் அப்' செய்ய ஆள் கிடைக்கவில்லை: