பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109


வேண்டாம். இலங்கைத் தமிழர்களின் கொந்தளிப்புக்கு இன்னும் கொஞ்சம் உஷ்ணம் சேர்த்துக் கொடுக்க ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால் இராவணபுரிக்குப் போக 'விசா'வுக்கு ஏற்பாடு செய்து விடாதீர்கள். ஒரே ஒரு அணா மாத்திரம் நீங்கள் செலவிடுங்கள், போதும்! கொதிக்கும் வெய்யிலைப் பற்றியோ, கொட்டும் மழையைப் பற்றியோ, இடித்துத் தள்ளும் மனிதப் பிராணிகளைப் பற்றியோ ஞாபகமேயில்லாமல், முற்றும் துறந்த மோன நிலையிலே கிடைத்த ஏதாவது ஒரு நம்பருள்ள பஸ்ஸில் ஏறிக் கொண்டு விடுங்கள்! அப்புறம், நான் சொல்லும் அந்த அதிசயபுரி உங்கள் கண்களிலே படம் காட்டத் தொடங்கி விடும்.

இத்தகைய ஓர் இன்பச் சூழ் நிலைக்குக் காரணமான இந்தச் சூத்திரதாரியைப் பற்றி — இந்த நடமாடும் தெய்வத்தைப் பற்றி நீங்கள் ஒரு நிமிஷமாவது அனுதாபப்படவேண்டும்?—இந்தத் தெய்வமல்லவா உங்கள் மீது அனுதாபம் காட்டித் தொலைக்கிறது? இல்லையென்றால், ‘டிக்கெட்' குரல் எழுப்பி, அப்புறம் உங்களுக்குக் கடன் பட்டிருக்கும் அரையணா நாணயங்களை நாணயமாக உங்கள் வசம் ஒப்புவிக்குமா?

'பீக் அவர்' என்கிறார்களே, அந்தத் தர்மசங்கட நிலையிலே இந்தக் கடவுளுக்கு எண்சாண் உடம்பும் ஒற்றைச் சாணாகி, பாவம், காக்கி உடம்புக்குள் புதைந்து வியர்வையில் மிதக்கும். காணாத அக்