பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தபால்காரன் எப்போது வருவான் என்று ஆவ லோடு நான் காத்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயம் பார்த்து என்னுடைய இடது தோள் துடித் தது. இடது தோள் துடிப்பது நல்லதா, கெட்டதா என்ற பயம் எனக்கு வந்துவிட்டது. நல்ல வேளை யாக, எப்போதோ கேட்ட சினிமாப் பாட்டு ஒன்று ஞாபகத்திற்கு வரவே, இடது தோள் துடித்தால் இன்பம் என்று தீர்மானித்து, ஆனந்தப்பட்டேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை. தீபாவளிக்கு என்னை அழைத்துப்போக என் அத்தான் பட்ட ணத்திலிருந்து பறந்து வருவதாக எழுதியிருந் தார். முன்கூட்டியே, சூசகமாக நல்ல சேதியைத் தெரிவித்த என்னுடைய இடது தோளுக்கு மாத் திரம் மானnகமாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்!