இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
47
நம்மையும் இருத்தி வைத்து வேடிக்கை பார்ப்பார்கள். கல்யாண விருந்தில் நாம் உண்ட களைப்பை அவர்கள் அறிந்ததாகக் காட்டிக் கொண்டால், அப்புறம் நாம் தொண்டர்களாகவன்றோ உருமாற நேரிடும்!
ஆம்; இந்தத் திருமண அழைப்புகளை வாழ்க்கையின் புனிதத் தொடக்கத்திற்கு ஓர் அன்புச் சாட்சியமாகவே கொள்ளுகிறோம்.
காதல் வாழ்க்கைக்கும்-வாழ்க்கைக் காதலுக்கும் இவையே அத்தாணி மண்டபங்களாகவும் அமையக்கூடும்!
காதலர்கள் தங்கள் காதலை மறந்தாலும், இந்தத் திருமண அழைப்பை மறக்கவே முடியாதல்லவா..?