பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேவலம், காதில்லாத ஒர் ஊசியிலே அப்படி என்ன மகத்துவம் இருக்கிறதென்று அடியேனுக்கு நாளது தேதி வரைக்கும் தெரியவில்லை!-1966-ம் வருஷம் பிறந்து இன்றைய தினம் வரைக்கும்தான் சேர்த்துச் சொல்லுகிறேன். ஆனல், சுவேதாரண்யர் என்று பெயரிடப் பெற்று, திருவெண்காடர், என்று அழைக்கப்பட்டு, பட்டினத்துச் செட்டியார் ஆகி, பிற்பாடு பட்டினத் தாராகவே ஆகிவிட்ட பூரீமான் பட்டினத்தடி களுக்கு இந்த ஊசி-அதுவும் காதற்ற ஊசிதான் ஞாைேதயத்தினை நல்கிய விந்தை இருக்கிறதே அதுதான் எனக்குச் சிருஷ்டிப் புதிராக இருந்து வருகிறது!