பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6& சனீஸ்வர பகவானுக்கு வாகனம் காக்கை. இந்தக் காக்கையை யாராகிலும் வரும் தேர்தலிலே தேர்தல் சின்னமாகக் கொண்டால், கடைசிப் பட்சம் சனிஸ்வர பகவான் சந்தோஷப்பட்டு, அவர்கள்பால் தம் பார்வையைத் திருப்பாமல் ஒதுங்கியிருக்கக் கூடுமல்லவா? ஓர் அதிசயம். குயில் முட்டையை காக்கை அடைகாக்குமாம்! ஊராட்சியிலிருந்து மாநகராட்சி வரை சுத்தப் பணிக்கென எவ்வளவு பணம் செலவழித்தாலும் சரி; அந்தச் சுத்தப் பணியிலே இந்தக் காக்கை களுக்கும் ஒரு பங்கு நிச்சயம் உண்டு என்பதை யார் தான் மறுக்கக் கூடும்?......