95
அல்லாமல், தங்கள் செல்வங்களின் காதற்கனவுகளை நிறைவேற்றி வைக்கத் துணியும் பட்சத்திலே, நம் டி.டி.கே. டிபார்ட்மென்ட் அபாய விளக்குக் காட்ட நேர்ந்து விட்டதென்றால், அப்புறம் அவர்கள் இருவருமே வாழ்க்கையைக் கண்டு பயந்து ஆரம்பித்த காதல் பாட்டையும் முடிக்கத் தெரியாமல், காதல் பாட்டையும் முடிக்க முடியாமல் ஆளுக்கொரு திசையாக "குட்பை" போட்டுப் பிரித்துவிடுகிற தர்மசங்கடத்தை நல்ல ஆள் “டைரக்ட்" செய்து பார்த்தால், அப்போது தான் அதன் யதார்த்த நிலை பளிச்சிட்டுத் தெரியும்! காதலிக்கத் துணிந்த இணைக்கு இணைப்பாக எல்லாம் அமைந்து இருந்து; "விதி" மட்டும் அவர்களுக்கு அனுசரணையாக அமையாமற்போனால் அப்புறம் அவர்கள் வாழ்க்கைப் பந்தயத்தில் தளைப்பட்டு, சம்சார சாகரத்தில் மூழ்கி உப்பெடுத்து அந்த உப்பின் கரிப்பில் மனம் கசந்து "தெய்வமே" என்று காலண்டர் தாள்களைக் கிழித்து வீசும் பணிக்கு ஆளாகும் தர்மசங்கடத்தை யார்தான் ரசிக்க முடியும்?
"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!" என்று ஓர் ஆங்கில வாசகம் உண்டு. திருமணங்களின் முன்னேற்பாட்டுச் சடங்கிற்கான நிச்சயதாம்பூல வைபவத்தை நடத்துவதற்கென்று சொர்க்கத்துக்குப் போய் வர வேண்டிய இக்கட்டையும் தர்மசங்கடத்தையும் தவிர்ப்பதற்காகவேதான் போலும், எல்லாச் சடங்குகளையும் இந்தப்