பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயமரியாதை இல்லாத சுதந்திரம் 19 சின்னான், இப்போது சவால் விட்டான்: "அட கம்மா நிறுத்து சாமி. நீ யூனிபாரத்துக்கு தோதுவா நடந்துக்கினால், நாங்களும் அதுக்குத் தோதுவா நடந்துக்குவோம். நீ இன்னாடான்னா..." போலீஸ்காரருக்கு ரத்தம் கொதித்தது. மிரட்டலோடு கத்தினார். "இன்னாடா, திட்டம்போட்டு பண்ரீங்களா? நாளைக்குப் பார்த்துக்கலாம். இந்த இடத்துலே உங்க கட்ை இருந்தா நான் தொப்பியை கழட்டி வச்சுடுறேன்” போலீஸ்காரர் எல்லா விவரங்களிலுமே அனுபவஸ்தர். புரிந்து கொண்டார். இது தனியாக கவனிக்கிற சமாச்சாரமில்லே...' சரோசாவைப் பார்த்தபடியே சைக்கிளை உருட்டி, பிறகு அதில் ஏறிக் கொண்டு பெடல்களை அழுத்தினார். மறுநாள், மாறாட்டமாய் வந்தது. பூக்கடைக்குப் போய்விட்டுத் திரும்பிய தாயம்மாவும், சின்னானும் ஆச்சரியப்பட்டார்கள். சரோசா, பிள்ளையார் கோவில் முகப்பில கடை போட்டிருந்தாள். தாயம்மா கண்ணைச் சிமிட்டியபடியே, "கோவில் பக்கம் கடை போடக் கூடாதுன்னு சொன்னாங்களே... இவ எப்படிப் போட்டா? ஒருவேளை, கோவில்காரன் எவனையாவது வளைச்சுப் பூட்டிருக்காளா..? எக்கேடும் கெடட்டும் தத்தேரி கயிதே.” என்றாள். ஒவ்வொருவரும் தத்தம் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார்கள். தாயம்மா, உதிரிப் பூக்களை பிளாஸ்டிக் பேப்பரில் இருந்து விடுவித்துக் கொண்டு இருந்தாள். சின்னான் வாழைப்பழ வண்டியை முன்னால் இழுக்க, பார்வதி அதை பின்னால் இருந்து தள்ளிக் கொண்டிருந்தாள். துலுக்கானமும், சாந்தியும் ராமனோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். மாரியம்மாள் தனது கீரைகளைக் அலசி இருந்தாள்.