பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




33 தாத்தாவும் பேரனும்

அதன் பாகமெல்லாம் ஒரு கையகலத்துக்குக் குறுகி விடும்படி செதுக்கப்பட்டிருந்தது. கத்தி வெட்டுகள் அதன் மீது தாறு மாருகப் பதிந்து கிடந்தன. அதன் பல பகுதிகளிலும் போதுமான தேரம் உட்கார்ந்திருந்தால், அந்த ஊரில் உள்ள ஐம்பது வயதுக்கு அதிகமாகிவிட்ட பெரியவர்கள் பெயரின் முதல் எழுத்துக்கள் ாம் நமது பின்புறத்தில் அழுத்தமாகப் பதிந்து விடும் என்று

ஒரு தடவை சொன்னர். ர்தல் சமயம் தவிர்ந்த இதர காலங்களில் விடார் பெஞ்சியில் யாரும் அதிகம் பேசுவதில்லை. சிந்திப்பதற்கு உரிய இடம் அது. தான் அங்கு சேர்ந்த சமயம் தாத்தா தீவிரமாகச் சிந்தித்துக் கோண்டிருத்தார். அவர் தொப்பி மூ க்க ந் தண்டுமேல் வந்து கவிழ்ந்திருந்தது. பார்க் பெஞ்சியில், மிஸ்டர் பெர்னி பரூச் அமர்ந் ருக்கும் கோலம் என்று சில சமயங்களில் படங்களில் நாம் காணும் காட்சியை அவர் தினேவுபடுத்தினர். அவர் கண்கள் மூடியிருந்தன. புகைக் குழாய் அவிந்து விட்டது. ஒரு முழங்காலைப் பெஞ்சியின்மீது உயர்த்தி வைத்திருந்தார். மங்கலான தேமல் படர்ந்த எலும்புக் கரங்கள் அந்தக் காலேச் சுற்றிப் பிடித்திருந்தன. கடற் பறவையின் இச்சொலி, பூச்சிகளின் ரீங்காரம் இவை தவிர, அங்கு அதிகச் சப்தம் இல்லை. எச்சரிக்கையின்றித் திரியும் வண்ணப் பூச்சி ன்தன் மீதாவது, முதியவர்களில் ஒரு வ ர் சளப் பெனத் துப்பும் ----> ச் சாறு தரும் ஒலியும் அவ்வப்போது கேட்கும். இம் ளில் சிலர் காற்றுக்கு நேரே எச்சிலை வளையமாய் துப்பக் ர்கள். பந்து விளையாடும் இடத்தில் உள்ள துப்பற் திற்குப் பத்தடி தூரத்தில் நின்றவாறே கணக்காகத் துப்பும் :காவிகள். நான் மெதுவாகப் போய்த் தாத்தாவின் பக்கத்தில் உட்கார்ந் தேன். சிறிது நேரத்தில் அவ்ர் ஒரு கண்ணையும், அப்புறம் அடுத் ததையும் திறந்தார்._தெளிவு ப்ெற விரும்பியவர் போல், தலையை

,ஹல்லோ, என்ன விஷயம் ? என்றார்

பிரமாதம் ஒன்றுமில்லை. பெண்கள் வீட்டைச்சுத்தப்படுத்து கிறார்கள். அது எனக்குக் குழப்பம் ஏற்படுத்தியது.”*

அவள் எழுந்து நின்றார், ‘ எனக்கும் குழப்பம் உண்டாக்கியது. சிறு ஒய்வை நாடி நான் இங்கு வந்தேன். ஒட்டடைக் கம்புகள் சுழலவும், வாளிகள் கலகலக்கவும் தொடங்கிய உடனேயே நான் வெளியேறி விட்டேன். இங்குள்ள இதர கனவான்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல், நாம் துறையின் எல்லைக்குப் போவோம், வா. இந்த ஊர் முழுவதும் வீடுகள் சுத்தம் செய்யப் படுவதாகத் தோன்றுகிறது ‘ என்றார்.

துறையின் T-வடிவ முடிவை நாங்கள் அடைந்தோம். தாத்தா ஒசை எழுப்பியபடி உட்கார்ந்து, அங்குள்ள கம்பம் ஒன்றில் சாய்ந்தார். நானும் அப்படியே செய்தேன். கடற் பறவைகள் கழன்றன, வளையமிட்டன, சிறகை அடிக்காது பறந்தன.