பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்டம்பர் கீதம்-2 - 143

பன்றி நெருப்பில் வெடிபடும் ஓசையை நான் அறிவேன். அதிலேயே வளர்ந்தவன் நான். --

முதிர்ந்தவர்கள் நிறைந்த புற உலகத்தோடு நான் கொண்ட உண்மையான முதல் தொடர்பு கேரி மே தான். தாத்தாவும், அவருடைய வேட்டை நண்பர்கள், மீன் பிடிப்பு நண்பர்கள் சிலரும் எனக்குத் தோழர்கள் போல் விளங்கினர் என்பது நிஜமே. ஆஞல் அவர்களை வளர்ச்சியுற்றவர்களாக நான் அதிகம் கருதி: தில்லை. மீனவர்கள், நீக்ரோ விவசாயிகள் ஆகியோரிடையே பெரியவர் பலர் எனக்கு நண்பர்கள் தான். ஆளுல் உபாத்தியாயர் களும் அவர்களை ஒத்தவர்களும் விரோதிகளே யாவர். அன்று என் நிரூபிக்கப்படும் வரை அவர்கள் குற்றவாளிகளே.

கேரி மேயிடம் நான் என்னைப் பறி கொடுக்க நேர்ந்தது. தாத்தா என்னைத் தேடிப் பள்ளி வந்த தினத்தில் தான். காலே பத்து மணி சுமாருக்கு அவர் வந்தார். மிஸ் நைட் அவரை விசாரிக்கச் சென்றாள். பிறகு திரும்பி வந்து, என் பக்கம் விரலை அசைத்தாள். தான் அவளோடு ஹாலினுள் போனேன். தாத்தா, கைகளால் தொப்பியை முறுக்கியபடி, கூடத்தில் இருந்தார்.

உன் தாத்தாவுக்கு ஒரு அவசர காரியமாம். புருக்களின் பருவம் இன்று தான் துவங்குகிறது என்று அவர் சொன்னுர், பிரன்ஸ்விக்கின் மறு கோடியில் பெரிய புரு வேட்டை நடைபெறப் போவதாக அவருடைய நண்பர் ஒருவரிடமிருந்து செய்தி கிடைத் திருக்கிறதாம். நீ இன்றைய இதர பாடங்களுக்காக இங்கிராமல் அவரோடு செல்லும்படி நான் அனுமதி அளித்தால், உனது கல்வி அபிவிருத்திக்கு ஒரு கேடும் ஏற்பட்டு விடாது என்று அவர் சொல் கிரு.ர். புருக்களில் சிலவற்றைத் தின்பதற்காக அவர் என்னையும் விருந்துக்கு அழைத்திருக்கிரு.ர். நீ அவரோடு செல்வது நல்லது. நாளை பிற்பகலில் பரீட்சைத் தாள்கள் விஷயமாக இரண்டு மணி நேர உதவி எனக்குத் தேவைப்படும். அதை நீ கவனிக்கலாம் “ என்று கேரி மே சொன்னுள்.

உபாத்தியாயினியை முத்தமிடலாம் போலிருந்தது எனக்கு. நான் என் ஒழுக்கத்தைப் பாதுகாத்துக் கொண்டு, வேகமாக முடுக்கிவிடப்பட்ட ட்ரெயின் மாதிரி கர்ஜித்தபடி ஒடினேன். தாத்தா சிரித்தார்.

சரியான குதிரைக் குட்டி அவள். நான் மட்டும் நாற்பது சொச்சம் வயது குறைந்தவகை இருந்தால், அவளையே கட்டிக் கொள்வேன். அவள் விவேகம் உள்ளவள். விவேகமுடைய செங் கூந்தல் அழகியைக் காண்பது அபூர்வம். நாம் புருக்களைச் சுடப் போவோம் என்று அவர் சொன்னுர்,

துப்பாக்கிகளையும், சிறிய மிக்கி எனும் பொன்னிற வேட்டை நாயையும் தாத்தா கொண்டு வந்திருந்தார். அந் நாய் பற்றி தான் இதுவரை குறிப்பிடவில்லை. மிக்கி பழைய காக்கள் இனத்தைச் சேர்ந்தது. பாய்ச்சல் நாய் அளவு பெரியது. எல்லா