பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

சொல்வது போல், ‘ நான் உமது அபிப்பிராயத்தை மதிக்கிறேன். ஆளுல் உம்மைவிட நான் நன்கு அறிந்தபோது அல்ல. இவ்விஷ பத்தில் நான் அதிகம் அறிந்தவன்.”

கனலும் தீக்கங்குகள் மீது கடல் பூண்டில் கிடந்து அவிந்து ஆவிப் புகை நெளிய விடும் சிப்பிகளை முதலாவதாக ஒரு பறையில் அள்ளி, நமக்கு வலப்புறம் விரித்த கத்தியைக் கையில் பிடித்தபடி நிற்கும் நீக்ரோச் சிறுவனிடம் கொடுக்க வேண்டும். நமக்கு முன் குல், கரடுமுரடான பைன் மர மேஜை மேல், கொதிக்கும் உருகல் வெண்ணெய் நிரம்பிய ஒரு சட்டியும், அகலமான பெரிய காலித் தட்டும் இருக்கும். தொடுகவைக்குத் தேவையான காடி குறுகிய தழுத்துடைய ஜாடியில் இருத்தும், உருண்ட சிறு செம் மிளகுகள் காரம் குன்றாது அதினுள்ளேயே கிடக்கும். ஜானி கேக்குகள், சோள ரொட்டிகள் முதலியன ஒரு தட்டு நிறைய நம் கன் இருக்கும். -SS, பீவோ-பீர் போல் ருசிப்பதாகக் கருதப்படுவது-கிடைக்கும். - - “ தொடங்கு என்று சாடை காட்டியதும், கறுப்புச் சிறுவன் சிப்பிகளைத் திறக்க ஆரம்பிக்கிருன். அவன் ஒரு டஜன் றக்கும் வரை காத்திருந்து, அதன்பிறகே அவற்றை நாம் வெண்ணெயில் அமுக்தி எடுத்து, மிளகுக் காடியில் தோய்த் து. தட்டில் வைக்க வேண்டும். சிப்பிப் புழுவிலிருந்து வடியும் கொழுப்பு, வெண்ணெய், சதுப்புச் சகதி ஆகியவற்றைத் துடைக்க வேண்டும், கேக்கின் பிசுக்கும், சோள ரொட்டியின் துண்டுகளும் இவற்றுடன் சேர்ந்துவிடும்.

என்ன இருந்தாலும், ஒட்டிக்கொண்டிருக்கும் சகதி எழுப்புகிற

நறுமணத்துக்கு இணையானது வேறு எதுவுமில்லை. காற்று நம் முகத்தில் வீசுகிற போது, நீரோரத்து ஓக் மரங்கள் அக்காற்றில்ை நடுங்கும்போது, கரோலினவின் சதுப்பு எப்படி மணக்கும் என்பதை நன்கு அ ருந்தால்தான் இது உமக்குப் புரியும். பிறகு நாம் நம் விரல் நக்குகிருேம். முதல் பன்னிரண்டு சிப்பிகளில் நாம்

இசத்தியிருந்த வேளைக்குள்ளாக இன்னொரு டஜன் சிப்பிகளே அச்சிறுவன் திறந்து வைக்காமல் டேர்னல், குறைகூறும் விதத்தில் அவனே நோக்குகிருேம்.

‘’ போதுமான அளவு சிப்பிகள் என்பது கிடையவே கிடை யாது. கணிசமான அளவு சிப்பிப் புழுக்களே ஏற்றுக்கொள்ளும் தன்மையில் மனித வயிறு படைக்கப் பெறவில்லை. இதுதான் உண்மை என்று தாத்தா கூறுவது வழக்கம், நான் அதிகபட்ச மாகத் தின்றது. நான்கு டஜன்களாகும். ஒவ்வொன்றும் ஒரு கற்கண்டுக் கட்டி அளவு பெரிது.

ஒருவன் தனது சிப்பிகளைத் தானே திறப்பதும் நிச்சயமாக சாத்தியமே. ஆல்ை அவ்விதம் செய்யும்பொழுது அதிலுள்ள ஒரு கவர்ச்சி போய்விடுகிறது. ஆவி கக்கும் கடல் பூண்டின் வாசனை. கடல், மரங்கள் ஆகியவற்றின் நன் மணம், நிதானமாக எரியும்