பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வுெள்ளாடும் நானும் ###

ஆயப்போகிறது என்று தெரிந்து நான் நிஜமாகவே சந்தோஷப், இடுகிறேன். இல்லையெனில், காட்டின் இந்தப் பகுதியில் இனிச் தடுவதற்கு எதுவுமே இராது. எருமைகளுக்கு என்ன நேர்ந்தது. அன்று எண்ணிப்பார் என்றார். :

கிறிஸ்துமஸ் நாள் ஒளியோடு, தெளிவாக, உதயமாயிற்று. ஆணுல் ஆதைப் பார்க்க தான் வீட்டில் இல்லை. வாத்துக் குணத் திருகே நின்றேன். மிக்கியும் குளிரால் நடுங்கியபடி என் அருகே நின்றது. கிறிஸ்துமஸ் மரத்தின் கீழே பார்ப்பதற்கு நான் அறவே மறந்துவிட்டேன். .

15

வெள்ளாடும் நானும் -

இல்லாம் இனியதாகத் தோன்றிய வசந்தம் ஒன்று இருந்தது. அது சீக்கிரம் வந்தது, வெகுநாள் நீடித்தது. அதனல் பேஸ்பந்து ஆட்டச் சாமான்களைக் குறித்த காலத்துக்கு முந்தியே எடுக்க நேர்ந்தது. மீன்பிடிப்பையும் கோடை விடுமுறையையும் பற்றி, கட்டு மொத்தமாக எண்ண வேண்டியது அவசியமாயிற்று. மீன் பிடிப்புக்கும் விடுமுறைக்கும் மேலாக, எனக்கு ஒரு குதிரைக்குட்டி வேண்டும் என்று நான் எல்லோரையும் தொந்தரவு செய்ய வானேன். ஸேன் கிரே எழுதிய கெளடபாய் கதைகளில் அநேகமாக எல்லாவற்றையும் நான் படித்துவிட்டேன். எனக்குக் குதிரை மோகம் ஏற்பட்டிருந்தது. தாத்தா, எனது கருநீலக் குதிரை சவாரியாளர்கள் மனுேபாவத்தில் அதிக அசிரத்தையே காட்டி . அவர் குதிரைகளிடம் அதிக அக்கறை கொண்டிருக்க வில்லை. -

நான் அறிந்தவரையில், குதிரைதான் மிக ஊமையான பிராணி. அதை மேற்பார்க்க தனிச் சக்தி தேவைப்படுகிறது. அதற்குத் தீனி வைக்க வேண்டும் : தண்ணிர் காட்டவேணும் ; அதைப் பண்படுத்தி, சீவிவிட வேண்டும். அது சதா ஒரு காலை அல்லது எதையோ தொழுவில் இடித்துக்கொள்ளும். எடுத்ததற் கெல்லாம் வைத்தியரை வரவழைக்க நேரும். கைக்குழந்தையைப் பராமரிப்பது போல் அதையும் கவனிக்க வேண்டும். அதன்மீது அமர்ந்து தூக்கி எறியப்பட வேணும் எனும் உனது முதல் ஆர்வம் தீர்ந்த பின்னரும், அவ்வளவு பெரிய பிராணியைக் கவனிப்பதற் குரிய ஒருமைப்பாடு உன்னிடம் இருக்குமா என்பதை நான்

மேலும், அதன் லாயத்தை சுத்தம் செய்ய வேண்டும்.: