பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

ஆவதற்கு வெறிபிடித்தவனே ஏற்றவன் என்று-அது பற்றித்தான். நீரில் மூழ்கியும், பனியில் விறைத்தும், நியுமோனியா பெற்றும் சாகலாம் என்ற நிலைமைக்குத் துணிந்த பிறகு, காலையில் இருட் டோடு விழித்தெழுத்த பிறகு, மைல் கணக்கில் படகு வலித்த பிறகு, வசிய பொம்மைகளை மிதக்க விட்டு விரல்களில் விறைப் பேறிய பிறகு, செயலற்று இருந்ததால் பாதங்கள் உறைந்த பிற்கு, நான் தீவிரமாகத் தின்ன விரும்பாத பறவை இறைச்சியின் ஒரு சில இராத்தல்களைத் தேடி இடைவிடாத அசெளகரியங்கள் அனுபவித்த பிறகு, நனைந்த எங்கள் உடுப்புகளிலிருந்து ஆவி - ` இருப்பின் முன நின்றபோது, ஒரு போருளேப்பற்றி முடிவு செய்தேன் : வாத்து வேட்டையாட நாம் பைத்தியம் பிடித்தவர்கள் ஆகவேண்டுமென்றால், நான் அறி வுேடையவனுக இருக்க ஆசைப்படவில்லை. - -

2

எக்ஸ். ஒய்.-மீன்

அபிவிருத்தி அறிக்கையில், முக்கியமாக அல்ஜீப்ராவிலும் சாஸ் சிலும், மிக மோசமான மார்க்குகள் பெற்றதஞலேயே இவ் விஷயம் எழுந்தது என நான் நினைக்கிறேன். மிஸ் ஹெட்டி ஸ்ட்ரூதர்ஸ் அல்ஜீப்ரா கற்றுக் கொடுத்தாள். மிஸ் எம்மா மார்ட்டின் சாளர் கற்பித்தாள். இவற்றில் எதிலும் நான் கொஞ்சமும் முன்னேறவில்லை. எனது பெற்றாேர் என் தேகத்தில் ஒரு சிறிதைப் பிய்த்தெடுத்தனர். ஒரு ஞாயிற்றுக்கிழமை, பிந்திய நீலமீன் ஒட்டத்தை ஆராய நாங்கள் போனபோது, தாத்தா விடம் நான் கடுமையாக முறையிட்டுக் கொண்டேன்.

  • அதில் எவ்வித அர்த்தமும் இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. வான் தட் ஏப்ரில் வித் இட்ஸ் ஷூ அர்ஸ் ஸஅட்டி தி ட்ரோட்ட் ஆவ் மார்ச்ச் ஹேத் பீர்ஸ்ட் டு தி ரூட்டி என்பது போன்ற விஷயங்களைப் படிப்பதில் என்ன நன்மை ? ஜீவதிப் பேச்சி லாவது நான் ஏதேனும் அர்த்தம் காண முடியும். பையா, அந்தக் கயிறை எங்கே எடுத்தாய் ? என்று நான் ஒரு ஜீவியைக் கேட்டால், அதைத் துறையிலிருந்து திருடினேன் என்கிருன் அவன். அவன் என்ன சொல்கிருன் என்பது எனக்குப் புரிகிறது. அந்தக் கயிற்றை அவன் களவாடினன்’ என்று நான் முனு முணுத்தேன்.

தாத்தா, ஒரு கயிற்றில் சுருக்கு முடிச்சு போட்டவாறே மிருதுவாகச் சொன்னர் : நல்லது. ஒவ்வொன்றுக்கும் சில