பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

குதிகால்களே உதைப்பார் ; உண்மையிலேயே ஆச்சர்யகரமான முறையில் ஒரக்கண் பார்வை வீசுவார். -

நான் கூன் வேட்டை விஷயத்தைவிட்டு விலகிப் போய்விட் டேன். அன்றிரவில் கூனும் அவ்விதமே போயிற்று. பொதுவாக நான் குறிப்பிட விரும்பியது. இதுதான் ; நாம் செய்வது என்ன வாயினும்-கன் வேட்டை, பந்து விளையாட்டு, மீன் பிடிப்பு, முகாம் கூட்டம், எதுவாக இருந்தாலும்-அதில் அநேக நல்ல விஷயங்கள் கலந்துள்ளன.

நாம் செய்வது என்னவாயினும், அதில் இசை இருந்தது ; நல்ல உணவு இருந்தது ; விஞ்ஞானமும் தனித் தன்மை பெற்ற அறிவும் உண்டு. நெருப்புச் சுவாலையின் வேடிக்கையும், மிகுந்த சோர்வடைந்தால் சோம்பல் நிறைந்த ஒய்வும் இருந்தன. அந்த நாள் முடிவுற்றதும் பெரியவர்களுக்கு மானிறைச்சித் துண்டு இருந் தது. சிறுவர்களுக்கு ஒரு வாய் ஸ்கூப்பர்நங் ஒயின் கிடைக்கலாம் ஒவ்வொன்றுக்கும் ஏதோ ஒருவித அளவு : ஒரு ஆரம்பம் : ஒரு மத்தி, ஒரு முடிவு இருந்ததாகத் தோன்றிற்று. . . . . . வேட்டையாடுவதிலும் மீன் பிடிப்பதிலும் உள்ள மிகச் சிறந்த அம்சம், அதற்குப் போவது பற்றிச் சிந்திப்பதும், போய் வந்த பிறகு அதைப்பற்றிப் பேசுவதும் தான் என்று தாத்தா கூறுவது வழக்கம். சம்பாஷணைக்கு ஆதாரமாகவும், சட்டியில் கொஞ்சம் இறைச்சி போடுவதற்கு வசதியாகவும், உண்மையான ம்ையம் ஒன்று நமக்கு இருந்தாக வேண்டும். அன்றைய தினம் அவன் செய்த நல்லது பற்றிப் பெருமை பேசவும், அவன் செய்த தவறு களே வெட்கமில்லாமல் மூடி மறைக்கவும் ஒவ்வொருவரும் அனு: மதிக்கப்படவேண்டும் ‘ என்றார் அவர்.

கிராமாந்தரச் சமையலறையின் சுத்தமான வெள்ளை பைன் தரைமீது படுத்துக் கொண்டு, மெல்லிய பைன்மரப் பலகைச் சுவர் கள் உறுமும் தீயின் உஷ்ணத்தால் அதிர்வதையும், முட்டைகள் பன்றிக்கறி ஆகியவற்றின் நறுமணம் காப்பி, விஸ்கி இவைகளின் வாசனையோடு கலந்து நிலவுவதையும் ரசித்தவாறே, சுற்றுவட்டா ரத்தில் தலைமுறை தலைமுறையாக வழ்ங்கப்படும் கதைகளை எல் லாம் நானும் கேட்டேன். கடந்தகால கூன் வேட்டைகளைப்பற்றித் திரும்பச் சொல்லுவார்கள். வேட்டை நாய்கள் பறவை நாய்கள் பற்றிய சகல புளுகுகளும் மீண்டும் பேசப்படும். குறியை விடாது காக்கும் ஒரு நாய் தன் பிடிவாதத்தினுல் தவறிவிட்டதையும், ஒரு வருஷத்துக்குப் பிறகு அது கண்டுபிடிக்கப்பட்டதையும் பற்றிச் சொல்வர். பருவ நில்ை மாறிவிடவும், அந் நாய் குளிரில் விறைத்துச் செத்தது. பிறகு அதன் எலும்புக்கூடு அகப்பட்டது. அப்பொழுது அது காடைக் கூட்டம் ஒன்றின் எலும்புக் கூடுகளைச் சுட்டிக் கொண்டிருந்ததாம்.

‘ ராஜ்யத்துக்காக உழைத்தது பற்றி -கள்ள மது சம்பந்த யாக ஜெயிலில் வாழ்ந்ததைக் குறிப்பிடும் வசனம் இது-கார்பெட்