பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமை மசியல்

ச்ொல்லு’ என்று கூறி, அமுத்தலாகச் சிரீத்தேன். தாத்தாவைப் போல் வார்த்தைகள்ை உபயோகிக்கும் பழக்கம் எனக்கும் சிறிது படிந்துவிட்டது. -

நல்லது. ஒவ்வொருவரும் ஏழையாக இருக்கிற இக்காலத் திலேகூட, ஒரு குவார்ட் அளவு ஆமைத் துவட்டலின் விலே பத்து டாலர் ஆகிறது. ஒரு ஒட்டலில் அது கிடைக்குமானல், ஒரு பிளேட்டுக்கு 3.50 தர வேண்டியிருக்கும். அதாவது, தர்ன் அதைத் தின்ன முடியும் என்றால் கூட வாங்க முடியாது. அதை நான் தின்ன முடியாது. ஏனெனில் அதன் விலை வெகு அதிகன், என்பதோடு, இன்ளுெரு காரணமும் உண்டு. அத்துடன் அருமை கான ஷெரி ஒயினும் எனக்கு வேண்டும். பொன்ஞன மதுவிலக்கு இருக்கும் போது, அருமையான ஷெரி ஒயினை நாம் வாங்க முடியாது. அப்படியே வாங்க முடிந்தால் கூட, எனது ரத்த அழுத்தத்திற்கு மோசமானது என்றாே, அல்லது எதையோ டாக் டர்கள் கூறுவார்கள். பஞ்சம், வறுமை, மதுவிலக்கு, வாத நோய் இவற்றிடையே, நான் ஆமைத் துவட்டல் பெறத் தகுதியற்றவன் ஆகிவிட்டேன். வெகு காலம் வாழ்வதின் பயனின்மைகை; இது விளக்குகிறது.”

தாத்தா பெருமூச்சு விட்டார். - - - -->

பையா, விஷயங்கள் முன்பு இருந்தது போல் இப்போ தில்லை என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே, நாம் கிழடாகி வருகிருேம் என்ற உணர்வும் ஏற்படுகிறது. ஆனல் ஒவ்வொரு முறையும், நாம் சொல்வது சரிதான். ஏனெனில். விஷயங்கள் முன்பு இருந்தது போல் இல்லை. நான் இளமையோடு இருத்த காலத்தில், ஒரு நீக்ரோ, வளைகளில் தோண்டி எடுத்த அரைப் பறை ஆமைகள் இல்லாமல் சதுப்பிலிகுந்து ஒருபோதும் திரும்பமாட் டான். அஞ்சு சதத்திற்கு ஒன்று என்று விற்பதில் மகிழ்ச்சி அடைவான். பெண் ஆமைகளைச் சொல்கிறேன். அவை ஆண்களே. விடப் பெரியவை. அவை ஏழு அங்குலம் நீளம் வரை இருக்கும். முதிர்ச்சி பெற அவற்றுக்கு ஒன்பது வருஷங்கள் பிடிக்கும். ஆண் ஆமைகள் வயிற்றின் குறுக்கே அளந்தால் ஐந்து அங்குலமே இருக்கும். ஆகவே நீக்ரோக்கள் அவற்றை மூன்று சதங்களுக்கு விற்பார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஆமைகள் பிடி: பட்டுக் குறைந்து போயின என்பதற்காக மட்டுமே, அவர்கள். நன்கு வளர்ந்த ஒரு ஆமைக்காக மூன்று முதல் ஐந்து டாலர்கள் வரை பெறுகிரு.ர்கள். விருந்தளிக்கிற பணக்கார அரசியல்வாதி ஒவ்வொருவனும் ஆமையை முக்கிய உணவுப்பொருள்களில் ஒன் முகப் படைத்தே ஆகவேண்டும்.’

தாத்தா மறுபடியும் நெடுமூச்செறிந்தார். “ உன் பெரியப்பா ஹோவர்ட் ஏகப்பட்ட பணம் வைத்திருத்து போது, கவர்னர்களோடும் பொலி குதிரைகளோடும் தொடக்டி கொண்டிருந்த காலத்தில், அவரைக் காண. நான் மேரிலேண்ட்,