பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

போவது வழக்கம். அப்போதெல்லாம் ஒரே மாதிரி விருந்து தவிர வேறு இருந்ததேயில்லே என்றுதான் தோன்றுகிறது. ஆரம்டி, விஸ்கிக்குப் பிறகு, சின்கோடிக் சிப்பிப் புழுக்கள் தருவார்கள். அவை துறைமுக எலி மாதிரிப் பெரிதாக இருக்கும். அப்புறம் ஆமைத்துவட்டல் வரும். பின்னர், கித்தான் முதுகு வாத்தின் இதயமும், சிவப்புப் பன்றித் தொடைத் துண்டுகளும் கிடைக்கும். அதன் பிறகு பிராந்தியும் சுருட்டும். கித்தான் முதுகு என்று நான் சொல்வது ஏனென்றால், நான்கு ராத்தல் கனமுள்ள வாத்துக்கள் இருபத்தஞ்சு சதத்துக்கு இரண்டு வீதம் கிடைக்கும். கானடா சொத்துக்கள் தவிர வேறு எதையாவது விருந்தினருக்கு அளிப்பது. ஆவிர்ை அவமதிப்பது போலாகும், எப்பவாவது ஒரு தடவை. ஊசிவால் வாத்தைப் படைக்கலாம். ஆனால் இப்போது கித்தான் முதுகைக் காண்பது அரிதாகிவிட்டது. இறைச்சிக்காகச் சுட்டுத் தன்ஞவோர், அவை சர்வஜனப் பிரியமாக இருந்ததால், அவற்றை ஒழித்துவிட்டனர்:

“அன்ர்கள் அவற்றை எப்படிச் சுட்டார்கள் ? அதாவது, அவற்றை மொத்த வியாபாரியிடம் விற்க நீ எப்படிச் சுடுவாய்?” என்று கேட்டேன். தாத்தாவின் தத்துவத்தை விட, செயல் உத்தி களிலேயே நான் எப்பொழுதும் அதிக ஆர்வம் காட்டினேன். ஆளுல் நானே மிகுந்த தத்துவரீதியாகி விட்டேன். மற்றாென்றில் பற்றுதல் கொள்ளாமல் ஒன்றைப் பெற்றிருக்க முடியாது என நான் அறிந்தேன். -

  • அவர்கள் படகுத் துப்பாக்கிகளே உபயோகித்தார்கள் என்பது முக்கிய விஷயம். தட்டையான அடிப்பாகமுள்ள ஒரு படகை எடுப்பார்கள். அதன் முன்பக்கத்தில், துரித இயக்க பீரங்கி ஒன்றை உறுதியாய் கட்டுவார்கள். ஆணிகளிலிருந்து, கற்கள், குண்டுகள் முடிய என்னென்ன கற்பனே பண்ண முடியுமோ அதை எல்லாம் பீரங்கி நிறையத் திணிப்பார்கள். பெரும் உறைபனி படியும் காலம் வரை காத்திருப்பார்கள். அப்போதுதான் வாத், துக்கள், சுற்றிலும் காகிதம் போன்ற மென்பனி கவிந்திருக்க், சதுப்பில் உள்ள சிறு குளங்களில் ஏராளமாய் கிடக்கும். அவர்கள் உறைபனியினூடே படகு செலுத்தி இரவில் அங்கே போவார்கள், வாத்துக்கள் மண்டியிருக்கும் குளத்தை அடைவார்கள். படகுத். துப்பாக்கியைச் சுடுவார்கள். படகு குதிக்கும். நாற்பது, அல்லது அதற்கும் அதிகமான வாத்துக்கள் குளத்தில் செத்துக் கிடக்கும். அப்புறம், சந்தேகமில்லாமல், அவர்கள் பதுங்கி யிருந்தும் சுடுவார்கள். உயரே பறப்பனவற்றை அழைக்கப் பெட்டைகளைப் பயன்படுத்துவார்கள். பெண் வாத்து வால் மீது நின்று கூச்சல் போடும். ஆண் வாத்துக்கள் கும்பல் கும்பலாகக் கீழிறங்கும். இறைச்சி வேட்டைக்காரர்கள் பெரிய துப்பாக்கிகளை முடுக்குவர். அந்நாட்களில் வாத்துக்கள் மகாமூடங்களாக இரு ந் த ன. ஏனெனில், அவையோ மிக அதிகம். குறைவான் நபர்களேன்.