பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

மான் இறைச்சிமீது யாராவது ஒயினும் பாகும் ஊற்றியபடி விருப்பர். காட்டு வாத்துக்கள், சுடுசட்டியில் காரட்டு, வெங் காயம், ஆப்பிள் துண்டுகள் முதலியவற்றாேடு கலந்து உறவாடும். சில சமய்ம், காலச் சாப்பாட்டின்போது பன்றிக் கறிக்குத் துணைசேர்வதற்காக காடைகளும் பொரிக்கப்படலாம். - சாப் பாட்டின் பின் வழங்கப்படும் பழ வகையும் உண்டு. இதைத் திராட்சை வற்றல் பிட்டு என்று தாத்தா குறிப்பிடுவார். பழங்கால இங்கிலீஷ் கடற் பிரயாணிகள் தயாரித்து வந்த ஒரு பதார்த்தம் இது. மதுக்கடை எதிர்ப்பாளர்களின் கவனத்தைக் கவரக்கூடிய அளவில் பிராந்தி கலக்கப்பட்ட ஒரு குழம்பும் இத் துடன் பரிமாறப்படும். -

விடுமுறையின் ஒவ்வொரு நாளும் புதுப் புது உணர்வுக் கிளர்ச்சியை ஏற்படுத்தும். புதிய துப்பாக்கியைச் சோதித்தல், புதிய பூட்சைப் பழக்குவது-ர்ாணுவ் பூட்ஸ் போல் தோன்றும் புதிய மென்மையான பாதரட்சைகள் இவை-தண்ணிரால் நனைக்க முடியாத வேட்டைப் பையுடன் கூடிய புதிய மேலங்கியை அணிவது போன்ற அனுபவம் கிட்டும். இதில் எல்லாம் ஒருவித மின்சக்தி உண்டு. - -

ஆட்கள் அதிகப்படியான ஒய்வு பெறுவர், விசேஷ வேட்டை களுக்கு ஏற்பாடு செய்யப்படும். எனது காரியங்களை நான் ஒழுங் காகச் செய்திருந்தால், சில சமயம், குளிர் மிகுந்து பனி மயமான TGr அல்லது ரேக்கூன் வேட்டையாடுவத ற்கு என்னேயும் அழைத்துச் செல்வார்கள். அல்லது, மனிதரிடையே யிருந்தும் திடீரென்று வெறித்தனம் இபற்றுத் திரியும் ஆண்

\ இளச் சுடுவதற்கு டாம், பீட் இருவரோடு நானும் செல்ல அனுமதிப்பர். வேட்டையாடக் காடைகளும், சுடுவதற்கு வாத் துக்களும், மரத்தில் அடிக்க அணில்களும் இருந்தன. விடு முறையின் ஒவ்வொரு நாளிலும்-அற்புதம் எனும்-ஒரே தன்மை தான் உண்டு,

பாதி செத்து, முற்றிலும் விறைத்து நாம் வீடு திரும்புவோம். சூட்டின் வேகமும், விருந்து, கேளிக்கை ஆகியவற்றின் நறுமணக் கதம்பமும் நம்மை எதிர்கொள்ளும். நாம் தீயருகே சென்று, முதுகுப் இறத்தை நெருப்பில் காட்டியபடி நிற்போம் ; கைகளே ஆஷ்லதப்படுத்துவோம். இப்படிச் செய்தால்தான், பிறகு வெந்நீரால் அழுக்கைப் போக்கும்போது கைகளில் வேதனை ஏற்படாது. அப்புறம், புதிய பூட்சை உதறி விட்டு, சோர்வுற்ற பாதங்களை பழகிய மென்மையான காலணிகளில் புகுத்துவோம். இமல்லிய கால் சட்டை அணிந்து, மேஜைக்குச் சென்று, கர்ம. ஒதயாகச் சாப்பிடுவோம். இந் நாட்களில் ஒரு பட்டாளம் அதிகமான உணவுப் பொருள்களை விழுங்கி - , : முன்னுல் உள்ளதை எல்லாம் சாப்பிட்டு முடித்ததும் கமானவை வந்து சேரும். வெண்ணெய் நிறைந்த