பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

23
முடிவுரை


தான்பிரீன் டப்ளின் நகருக்குச் சென்றபொழுது வீர அயர்லாந்து பிளவுபட்டுக் கிடந்ததைக் கண்டான். பழைய குடியரசுப் படை இரண்டு பிரிவாகப் பிரிந்து, 'பிரீஸ்டேட் படை', 'குடியரசுப் படை என்ற இரண்டு பெயர்களுடன் விளங்கியது. பிரிட்டிஷ் துருப்புகளால் காலி செய்யப்பட்ட படை வீடுகளை எல்லாம் இரு படைகளும் பிடித்துக்கொண்டன. தேசம் முழுவதும் இரு படைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் போராடத் தயாராய் நின்றன.

தான்பிரீன் இரு கட்சியாரிடமும் சென்று அடிக்கடிசமாதானப்படுத்த முயன்றான். அவர்களை அழைத்துக்கூட்டங்கள் நடத்தினான். அவனுடைய நன்முயற்சியால் இரு கட்சித் தலைவர்களிலும் சிலர் ஒன்றுகூடி விவாதம் செய்து, கடைசியில் ஒரு சமாதான உடன்படிக்கை செய்துகொண்டனர். அந்த உடன்படிக்கையின் விவரம் முழுவதும் மே 1ஆம் தேதி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. தொண்டர்களுக்குள் பிளவு ஏற்பட்டுக் கலகம் நேருமானால், அதனால் அயர்லாந்து பல நூற்றாண்டுகள் தலைதுாக்கமுடியாதபடி பெரும் நஷ்டமடையும் என்பதும், எல்லாத் தொண்டர்களும் உடனேவேற்றுமைகளை மறந்து ஐக்கியப்பட வேண்டும் என்பதும், தலைவர்கள் யாவரும், பொது மக்களும், யுத்த வீரர்களும் தேசத்தின் நிலைமையை உணர்ந்து தங்கள் வலிமையைத் தொலைக்கக்கூடிய எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது என்பதும் உடன் படிக்கையில் வற்புறுத்தப்பட்டிருந்தன.

142