பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12
பாதிரி வேஷம்


தொண்டர்கள் மேற்கு லிமெரிக்கில் இருக்கும்போது போலிஸாரும் பட்டாளத்தாரும் அவர்களைப் பிடிக்க எத்தனையோ முயற்சிகள் செய்துகொண்டிருந்தனர். அந்தப் பிரதேசம் முழுவதையும் வளைத்துக்கொண்டு, வீடு வீடாகச் சோதனை செய்து வந்தார்கள். தொண்டர்களைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு ஏராளமான பொன் பரிசளிப்பதாக நடெங்கும் பறைசாற்றப்பட்டு வந்தது. அவர்களுடைய அங்க அடையாளங்களை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு போடப்பட்டது.

1919ஆம் ஆண்டு கோடை காலத்தில் பிரிட்டிஷ் கவண்மெண்டார் பழைய கிழட்டு ஐரிஷ் சிப்பாய்களையெல்லாம் ஒன்று சேர்த்து புதிய ரகசிய இலாகா அமைத்துப் பலப்படுத்திக் கொண்டனர். அடுத்த இரண்டு வருஷங்களில் அவர்கள் எத்தனை பேர் இந்த உத்தியோகம் பார்ப்பதற்காக உயிரை இழந்தார்கள் என்பதை அக்காலத்துப் பத்திரிகைகளைப் பார்த்தால் தெரியவரும். ஐரிஷ் தொண்டர்கள் தங்கள் தேசத்தாரேதங்களைக் காட்டிக்கொடுக்கும் நீசத் தொழிலைச் செய்வதற்கு முன் வந்ததைக் கண்டு சந்தித்த இடத்திலெல்லாம் அவர்களைப் பரலோகத்திற்கு அனுப்பி வந்தனர். அரசின் ரகசிய இலாகாவிலுள்ளவர்கள் தீவிரமாக எதையும் செய்யமுடியாதபடி அந்த இலாகாவையே முறித்து வந்தசர்கள்.

90