பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோரண வாயில் வஞ்சகச் சீனரின் சூதுமதி விளையாட்டுக் கள் உச்சக் கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த வேளை. நம் தாய்த்திரு நாட்டின் வெற்றிக் காக ஆண்டவனைப் பிரார்த்தித்துவிட்டு, வகுப்பைத் தொடங்கினர் உபாத்தியாயர். அது கதை வகுப்பு. ஒரே கதையை ஆளுக்கொரு பகுதியாகப் பிரித் து ச் சொல்லவேண்டும். கதைச் சுருக்கத்தை ஆசிரியர் சொல்லிவிட்டார். இப்போது மாண வர்கள்தாம் கதையைப் பின்னவேண்டும். இதோ, பூபாலன் புன்னகைபூத்த முகத்துடன் கதை சொல்லத் தொடங்கி விட்டான். ஆஹா! வகுப்புத் தோழர்-தோழியர் களுக்குக் கதை கேட்பதில்தான் எவ் வளவு ஆர்வம் !... எத்துணை ஆனந்தம் !!