பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றுதான் முகூர்த்த தினம், ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் ஆஸ்தான மண்டபத்தில் கூடிவிட்டார்கள். ராஜமரியாதைகளும் முறைப்படி நடந்தேறின. இளவரசன் விஜயேந்திரன் மணமேடையில் வந்தமர்ந்தான். : மணமகளும் தோழியர் புடைசூழ வந்து மணமகன் அருகில் உட்கார்ந்தாள். மந்திரங்கள் ஒலித்தன. - - முகூர்த்த வேளை நெருங்கியது. பட்டத்து இளவரசன் விஜயேந்திரன், புரோகிதர் பணிவுடன் நீட்டிய மங்கலத் தாலியைக் கையில்