பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தாயின் மணிக்கொடி ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன? ஊழை விலக்கும் பொருட்டு மற்ருெரு வழியை ஆராய்ந்தாலும், அங்கும் தானே அது முன்வந்து நிற்கும்!. ஏகச் சக்ராதிபதியாக விளங்க வேண்டுமென்னும் கச்சுமணம் கொண்டு நடந்த நிலவுத்தீவு மன்னனிட மிருந்து அடிமைச் சாசனம் எழுதி வாங்கிக்கொண்டான் விஜயேந்திரன். வெற்றித் திருவிளங்க, வாகைமணம் கமழ, வீர நகை சிரிக்க, இளவரசன் புரவிமீது புறப் பட்டான் !