பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதாளக் குகை மர்மம் 39 சந்தேகம் இடறியது. நானே இடறி விழுந்து விட்டேன். பெண்கள் சாகஸக்காரிகள் என்று சும்மாவா சொல்கி ருர்கள்? பேஷ்!... உனக்கு இன்னும் என்னென்ன வேடம் புனையத் தெரியும்? .. சொல்... நடக்க விருக்கும் என் திருமண வைபவத்தன்ருே, அல்லது, அதையடுத்து வரக்கூடிய எனது பிறந்த நாள் விழா வன்ருே உனக்குப் பரிசு தருகிறேன்!” என்ருன் பட்டத்து இளவரசன். அந்தப்பெண் நாணம் மேலிட, குனிந்த தலையுடன் நின்ருள். தீவட்டிகளின் வெளிச்சத்தில் அவளது அழ கிய வதனம் சோபை கூட்டியது. " உன் பெயர் என்ன பெண்னே? ' ' என் பெயர் வாசவி, இளவரசே :

  • அழகாகத்தான் இருக்கிறது ' என்ருன் அவன்.
  • உங்களைக் காட்டிலுமா?’ என இடைமறித்தாள் வாசவி.

அவளுடைய, பேசும் கண்களைக் காணக்காண அவனுக்கு ஆறவில்லை. அந்தக் கண்கள் அவனுக்கு ராஜவல்லியின் பேசும் விழிகளை நினைவூட்டின. மெய் சிலிர்த்தான். அதே நொடியில், அவனுக்குத் தன்னை எதிரியின் வாளிலிருந்து காப்பாற்றிய புது இளைஞன் ஒருவனின் அந்த அழகுக் கண்களின் ஞாபகமும் வக் திது.