பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயின் திருவிளக்கு! 57 அப்புறம் என்ன?... சுபயோக சுபதினத்தில் அழகனை இளவரசன் விஜயேந்திரன் மிகப் பூரிப்புடன் ராஜவல்லியின் கழுத்தில் திருப்பூட்டினன். தாயின் மணிக்கொடி பட்டொளி வீசிப் பறந்தது!... தாயின் திருவிளக்கு பெருமையுடன் விளங்கி யது!... அவ்வளவுதான்! கதையும் முடிந்தது; கத்தரிக்காயும் காய்த்தது. இதுவரை எங்கள் கதையினைப் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த உங்கள் எல்லோருக்கும் ஒல் வொரு மிட்டாய் பரிசளிக்கிறேன்; நம் வகுப்பு ஆசிரி யரின் பரிசு இது... இம்மாதிரி மதிநலம் வளர்க்கும் பண்பாட்டுப் பெருமையை விளக்கும் கதைகளைச் சொல்லி வரும் நம் ஆசிரியருக்கும் நம் அனைவரது சார்பிலும் வணக்கமும் நன்றியும் உரித்தாகுக!...