பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தாய்மை ஒரு நாள் சுழற்கண்ணியின் மாளிகையில் இன்ப சாகரன் குழல் வாத்தியக் கருவியுடன் நுழைந்தான். தெரியாதவள் போல அவள், "இது ஏது இந்தக் குழல் வாத்தியம்?" என்று கேட்டு வைத்தாள். 1.144 ஏ . “தீட்சண்யன் கொடுத்தானம்மா!" என்று கூறிய அதை அதை ஊதிக் கொண்டு கூத்தாடினான் இன்ப சாகரன். நமது சதித்திட்டம் இரண்டாவது கட்டத்தை அடைந்து விட்டது. இனி ஆரம்பிக்க வேண்டியதுதான் வேலையை என்ற முடிவோடு, அவள் அவனைத் தழுவி யெடுத்துத் தன் மஞ்சத்தின பக்கம் உட்கார வைத்து முத்தங்களால் அவன் முகத்தை சிவக்க வைத்தாள். தின்பதற்காக ரோஜாப் பூவைப் பறிப்பவர்கள் அதன் மென்மையையும் வண்ணத்தையும் வியந்து கொண்டா இருப்பார்கள்! இதழ்களைக் கிள்ளி வாயிலே போட்டுக் கொண்டே கடைசியில் அந்தக் காம்பை எறிந்து விடுவார்கள்! - அப்படித்தானிருந்தது, அவள் அந்த மலரொத்த இளைய மன்னனை எடுத்து முத்தமிட்டதும், அருகே உட் காரவைத்துக் கொண்டதும்! "கண்மணீ! உனக்கு ஒரு அருமையான பண் கற் றுத் தருகிறேன். அதை இந்தக் குழலில் நீ ஊதினால் பிரமாதமாக இருக்கும்!" என்று பேச்சை ஆரம்பித் தாள், வயதில் இளமையும், வஞ்சகத்தில் முதுமையுங் கொண்ட அந்த வடிவழகி.