பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தாய்மை . சுழலியின் கண்கள் அகல விரிந்தன. அவள் முகத் தில் யுதிய தேஜஸ் காணப்பட்டது. 'வெற்றி! வெற்றி!!' தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள், எனத் மகிழ்ச்சியோடு! அரண்மனைத் தோட்டம்-அடுக்கு மல்லிகைப் புத ரின் ஓரம்- அழகே உருவெடுத்த அரசிளங் குமரன் ஆரம்பித்து விட்டான் குழல் வாத்தியத்தை! இளையவள் கற்றுத் தந்த பண்ணை மாறி மாறி ஊதினான். பாவம்; அவனுக்கென்ன தெரியும்; அவள் கற்றுத்தந்த கீதம் பாம்புகளை அருகே வரவழைக்கும் கீதமென்று! பண்ணை அவனுக்குப் பாடமாக்க வேண்டும். அவன் அதை ஊதிக் கொண்டிருக்கும்போது தோட்டத்தில் தொலைவிலே விஷப் பாம்பை விட்டுவிடவேண்டும். குழலோசை கேட்டு பாம்பு அவனருகே வந்து பட மெடுத்து ஆடும். பண்ணை அவன் நிறுத்தினால், உடனே பாம்பு அவன் மீது சீறிப் பாய்ந்துவிடும். இப்படி யொரு திட்டத்தை தீட்சண்யன் தீட்டித் தந்து, அதற்கு வெகுமதியாக அவளிடம் பெற வேண்டி யதைப் பெற்று, அவளும் இளவரசனை அரண்மனைத் தோட்டத்திற்கு அனுப்பி விட்டாள். இன்பசாகரனின் குழலோசை குளிர்ச்சியை மொண்டு மொண்டு ஊற்றி யது! ஆனந்தத் தென்றல் வந்து ஆரத் தழுவுவது போன்ற உணர்ச்சியைத் தந்தது! மகுடியிலும் இல்லாத மயக்க உணர்வை அந்தக் குழலிலேயிருந்து புறப்பட்ட பண் கிளப்பியது.