பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மை 19 அலங் கோலமாக விழப்போவதை எந்த அன்னை தான் தாங்கிக் கொள்ள முடியும்! "இன்பசாகரா" என்று சப்தம் போட்டால் அவன் திடீரெனக் குழல் வாசிப்பதை நிறுத்தி விடுவான்- உடனே நாகம் தன் வேலையை முடித்துவிடும். என் செய்வாள் தாய்! கத்தினாள். எப்படி? "இன்ப சாகரா! ...வாத்யத்தை நிறுத்தாதே! நிறுத்தாதே! ஊதிக் கொண்டே யிரு!" என்று அலறினாள். தாயின் குரல் அந்த இளவலின் காதிலே ஒலித்தது. கண்ணைத் திறந் தான். எதிரே பாம்பு - நடுக்கம் தாங்க முடிய வில்லை. எழ முடியாதபடி ஆகி விட்டான். தொடர்ந்து சப்தமிட்டுக் கொண்டே யிருந்தாள் 99 “நிறுத்தாதே! ஊது? ஊது!?" என்று! அவனும் ஊதிக் கொண்டே இருந்தான், ஏன் எதற்கு என்று புரியாத நிலைமையில்! 6 6 ஊது ! ஊது!! என்று கூறிக் கொண்டே தாய் அவனருகே வந்து கொண்டிருந்தாள். குழலோசை உச்சக் கட்டத்தை அடைந்தது. நாக மும் இன்னும் மேலே உயர்ந்து படந்தூக்கி ஆடியது. "நிறுத்தாதே! ஊது! ஊது-தொடர்ந்தது அலறல்! அதையொட்டி "ஆ!" என்ற சப்தம்! ஆம்; கோப்பெருந்தேவி; தடாரென்று அந்தப் பாம் பின் முன்னே விழுந்தாள். படமெடுத்திருந்த பாம்பு அவள் மீது பாய்ந்தது- அவள் உடலிலே விஷம் பரவியது. இனியென்ன-