பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 ஆட்டக் காவடி 23 யிருந்தான். கனிமொழியின் கண்கள் கலங்கியிருந்தன. அவள் அவனைப் பார்த்தாள் அனுதாபத்தோடு! 66 “பண ஆசை தானே உங்களை இப்படியெல்லாம் பேசச் செய்கிறது! உடலிலே வலுவிருக்கிறது-உழைக் கக் கை கால்கள் இருக்கின்றன. கடவுள் சன்னிதானத் திற்குக் காவடி எடுப்பவர்களுக்குக் காவடி ஆடி, நூறு ரூபாய் சம்பாதிப்பதைவிட, கைத்தறி கைத்தறி வேலையிலே கிடைக்கிற பத்து ரூபாய், இருபது ரூபாய் எவ்வளவோ உயர்ந்தது அத்தான்! வேண்டாம் நான் சொல்வதைக் கேளுங்கள்--பக்கத்து வீட்டுக்காரர்கள் பரிகாசம் செய் வார்கள்! "சாமி இல்லை பூதம் இல்லை என்று சொல்லி திருக்குறள் திருமணம் செய்து கொண்டான். இப்போது ஆட்டக் காவடி எடுத்து ஆடப்போகிறானாம்" என்று ஊரார் கை கொட்டிச் சிரிப்பார்கள் அத்தான்!” என அழுதாள் கனிமொழி. அவன் "ஆட்டக்காவடி என்றால் அர்த்தம் தெரியாதவர் கள்தான் சிரிப்பார்கள்!- இது ஒரு நடனம் போலத் தான்” "நடனம் என்றால் அந்த ஆட்டக் காவடி நடனத்தை ஒரு மேடையில் ஆடிக் காட்டுங்கள்! பழனிக்கு காவடி தூக்கும் பக்தர்களுக்கு முன்னால் தானா ஆடவேண்டும்?" 'பணம் வருகிறதே-பணம்!” "மானம் போகிறதே--மானம்!" "கனிமொழி! உனக்கு எத்தனை தடவை சொல்லி விட்டேன்; நான் ஆடுவது ஆட்டக் காவடி- அவர்கள் தூக்குவது பக்திக் காவடி யென்று!”