பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டக் காவடி 31 அங்கே கனிமொழி இல்லை. அந்தப் பகுத்தறிவுச் சிட்டு எங்கேயோ பறந்துவிட்டது. கட்டில் மேலே ஒரு காகிதச் சுருள் கிடந்தது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். “பொது வாழ்க்கை என்பது கரும்பைச் சுவைப்பது போல அல்ல; கரும்பைக் கைகளால் தடவுவது போல ! தடவிப் பார்த்தால்தான் தெரியும்: கைமுழுதும் 'சுணை கள் குத்திக் கொள்ளும். உங்களுடைய முடிவுக்குப் பிறகு, நான் மேற்கொள்ள வேண்டிய முடிவுகள் இரண்டேதான் ! ஒன்று விஷம்- மற்றொன்று விவாக ரத்து ! இதில் எதைத் தேர்ந்தெடுப்பதென்று புரியாமல் உலகத் தில் எங்கேயோ ஒரு மூலையில் திரிந்து கொண்டிருக்கிறேன். இப்படிக்கு கனிமொழி, பகுத்தறிவுப் பெண். கடிதத்தைப் படித்து முடித்தான் கந்தன். கண் களிலே 'அலகு' சொருகப் பட்டதுபோல் துடித்துக் கீழே விழுந்து மூர்ச்சையானான்.