பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B 34 தாய்மை வக்கணை பேசினாளோ - எப்படியோ தேவியின் தியாகத் தால் தேவர்களின் எதிரி ஒழிந்தான் என்று திருப்தி கொண்டனர் பக்தர். அந்தப் பக்த கோடிகள் பரந்தாமன் பெற்ற வெற்றி யைக் கொண்டாடி, அவனையும் அவன் பிராட்டி பாமா வையும் ரதத்திலே வைத்துத் தெரு சுற்றினர். வெற்றி யின் சூட்சமும் தெரியாத விளையாட்டுப் பிள்ளைகளும், பரமாத்மாவுக்கு 'ஜே' போட்டனர். ஊர்ப்பிரமுகர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். நாயன வித்து வான்கள் தங்கள் திறமையைப் பொழிந்தனர். வீடெங்கு முள்ள பெண்டிரெல்லாம் ஆயர் பாடி கண் ணனுக்கு ஆராத்தி எடுத்து ஆனந்தப் பட்டனர் ஆடினர் பாடினர். . ஆனால் நாராயணியோ ஆடவுமில்லை; ஆராத்தி எடுக்கவுமில்லை; நடக்கும் வைபவங்களைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள். பரமாத்மாவின் ஊர் வலம் அவள் வீட்டைத் தாண்டிப் போயிற்று. அந்த வீட்டிலிருந்து யாராவது வந்து பகவானுக்குக் காணிக்கை செலுத்துவார்கள் என்று பக்தர்கள் எதிர் பார்த்தனர். யாரும் வரவில்லை. ரதம் போகும் திக்கைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டே யிருந்தாள் நாராயணி. ரதத்திலே நரகாசூர வதமே சித்தரிக் கப்பட்டிருந்தது. அந்தக் காட்சியை அவள் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். மலையெனத் தோள் படைத்த நரகாசூரனின் மார்பிலே ஒரு வேல் பாய்ந்திருக்கிறது. குகையெனத் திறந்தவா