பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

தாய்மொழி காப்போம்



கோஇள வழகன், தமிழ்மண்
கொண்டலாய்த் தோன்றி யிங்கே
பாமுடி யரசர் கீர்த்தி
பாரெலாம் பரவு தற்கே
தாவெனக் கூறா முன்னம்
தருகிறார் அவர்ப டைப்பை!
மாபெரும் பதிப்புத் தொண்டில்
மணிமுடி சூடு கின்றார்!

காரைக்கு டியார்ந மக்குக்
கவிதைகள் என்னும் பேரில்
கூரிய வாள்தந் துள்ளார்!
கொள்கைவாள் அதுதான்! அந்த
ஆரிய சூழ்ச்சி தன்னை
அடித்துமே நொறுக்கி யுள்ளார்!
நீர் இதைப் படித்துப் பாரீர்!
நிமிருவீர்! தமிழன் ஆவீர்!