பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

77



சீரழித்த ஆட்சிகளைச் செப்பத் தொலையாது;
தேன்மொழியாந் தென்மொழியின் சீர்மை பரவிவர
மீன்புலிவில் ஏந்திநல் மேலோர் துணைநின்று
காத்ததிரு நாட்டிற் கதவு திறந்திருக்கப்
பார்த்திங்கு வேற்றுப் பகைமொழிகள் உள்நுழைந்து
நீக்கமற எங்கும் நிறைந்தாலும் நம்மினத்தார்
தூக்கங் கலையாமல் சோர்ந்து கிடந்தாலும்
நான்வணங்குந் தெய்வ நலமிக்க செந்தமிழ்த்தாய்
தேன்வழங்கும் நாண்மலர்போல் என்முன் திகழ்கின்றாள்;
அண்ணன் திருமுகத்தில் அணுவளவும் சோர்வின்றி
என்னை வளர்க்கின்றாள் இவ்வுலகைக் காக்கின்றான்;
தெவ்வர் எவர்வரினுந் தென்மொழிக்குக் கேடில்லை;
எவ்வெவர் சூழினும் ஏதும் இடரில்லை;
ஆற்றல் குறையாமல் அம்மொழித்தாய் நின்றாலும்
ஏற்ற இடமின்றி ஏனோ தவிக்கின்றாள்?
சீர்மை குறையாமல் செம்மை சிதையாமல்
நேர்மை பிறழாமல் நின்றாலும் அம்மகளை
உற்றாரும் பெற்றாரும் உற்ற துணையாரும்
அற்றாரைப் போல அலையநாம் விட்டுவிட்டோம்;
கல்வி தருங்கோயிற் கட்டடத்துட் செல்வதற்குச்
செல்வி தயங்குகிறாள் செல்லும் உரிமையின்றி;
மூவேந்தர் ஆண்ட முறைதெரிந்தும் செங்கோலைத்
தாயேந்த இங்கே தடையுண்டாம்; அங்காடி
சென்றுலவ ஒட்டாமற் சேர்ந்து விரட்டுகிறோம்:
நின்றுமனம் ஏங்கி நிலைகலங்கச் செய்கின்றோம்;
பாட்டரங்கிற் சென்றிருந்தால் பைந்தமிழ் கேட்பதிலை
கூட்டுமொழிப் பாடல்களே கோலோச்சக் காண்கின்றோம்;
எங்கெங்கு நோக்கினும் இங்கே புகுந்தமொழி
அங்கங்கே ஆட்சிசெய் தார்ப்பரிக்கக் காண்கின்றோம்;
செம்மை யுறுமொழிக்குச் சீரில்லை பேரில்லை;
செம்மை யுறுமொழிக்குச் சீருண்டு பேருண்டு
பாலறியாப் பச்சைப் பகட்டு மொழிதனக்குக்
கோலுரிமை ஈயுங் கொடுமை நிலைகண்டோம்;
தாரமெனுஞ் சொல்லைத் தயங்காமல் ஆண்பாலாக்
கூறும் மொழியுண்டு; கொங்கை எனுமொழியை
ஆண்பா லெனவுரைக்க அஞ்சா மொழியுண்டிங்
காண்பா லிவனென் றறிய வுணர்த்துகிற
மீசை எனுஞ்சொல்லை மேதினியிற் பெண்பாலென்