பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தாய்மொழி காப்போம்



ஈடேறச் செய்தார்கள்; ஈடில்லாச் செந்தமிழே
மீண்டும் மலர்ச்சிபெற்று மேலும் உணர்ச்சியுற்று
யாண்டும் மணம்பரவ ஏற்றம் மிகக்கண்டோம்;
காஞ்சி புரத்தண்ணல் கற்ற அரசியலில்
நீஞ்சி வரும் அறிஞர் நெஞ்சார்ந்த பேருழைப்பால்
பாச்சுவையின் மேலாகப் பாரோர் கவைத்து வரும்
பேச்சால் எழுத்தால் பெறுமோர் மறுமலர்ச்சி
நாடறியும் ஏடறியும் நல்லவர்தம் நாவறியும்
கூடலர்தம் நெஞ்சறியும் கோல்கொண்டார் வீடறியும்
எங்கள் தமிழ்மொழிக் கீதோர் மறுமலர்ச்சி
எங்கும் பரவும் இனி.

 

கவியரங்கம் திருப்பத்துர் - 8.6-1965