பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

81



50. செந்தமிழ்ச்செல்வி

கேளார் தமிழ்மொழி கேடுறச் சூழ்ந்திடுங்

கீழ்மதியை

வாளால் அரிந்ததன் வேரைக் களைந்துநம்

வண்டமிழைத்

[1]தாளால் வளர்த்தனை; தண்புனல் வார்த்தனை;

நின்குறிக்கோள்

சூளாக் குறித்தனை; தொண்டுசெய் கின்றனை

தூமொழியே


செல்வியுன் தாளிற் சிலம்பும் பரலும்

செவிகுளிர

நல்கிடும் அவ்விசை நாள்முழு தும்பெற

நாடுகின்றோம்;

மெல்விரல் நீவி மிழற்றிய யாழொலி

போல இதழ்

சொல்லிய பாடலிற் சொக்கிநின் றேஉனைச்

சுற்றுதுமே.


நடைஎழில் காட்டுவை, நல்லறி வூட்டுவை,

நாண்மலரால்

தொடைஎழில் காட்டுவை, தோகையுன் சாயலில்

தோய்ந்துணரார்

உடை எழில் ஒன்றே உவந்தன ராகி

உணர்விலராய்க்

 கடைவழி ஏகுவர் காரிகை உள்ளெழில்

காண்கிலரே.


புகழ்மலை உச்சியில் போற்றிட வாழ்ந்தவர்

பூவுலகில்

இகழ்நிலை எய்தினர் எம்மவர் என்றுளம்

ஏங்குகையில்

தகவுடன் மீண்டுந் தலைநிமிர்ந் தோங்கிடத்

தாளெடுத்தே

அகவிடுந் தோகையென் றாடவந் தாயெங்கள்

ஆரணங்கே.

  1. தாளால் - முயற்சியால்