இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
82
தாய்மொழி காப்போம்
முந்தையர் தந்தநன் னூல்மலர் மொய்த்ததன்
தேனருந்திச்
சந்தனத் தென்மலைச் சாரலின் செந்தமிழ்
தந்தநலம்
சிந்தையுள் தேக்கிநற் செவ்வழிப் பண்தரும்
தும்பியென
வந்திடுஞ் செந்தமிழ்ச் செல்விபல் லாண்டுகள்
வாழியவே.
(21.12.1976)