பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

21



நீட்டித் தலைகாட்டி நேய மொழியுரைக்கும்,
வீழ்ந்து சிதையாதீர்! வீணாகிப் போகாதீர்!
தாழ்ந்து பணியாதீர்! தன்மானங் கொண்டெழுவீர்!
எவ்வழியால் உட்புகுவோம் என்றே இருக்கின்றார்
செவ்வியர்போல் பேசுகின்றார் செந்தமிழீர் நீரயர்ந்தால்
அன்றே நுழைவர்; அயரேல்! தமிழ்வாழ
ஒன்றே நினைப்பீர் உளத்து.