பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

59



'பொறுக்கும் வரை பொறுத்திருந்தோம் பொறுத்த நம்மைப்
புழுவென்று கருதுகின்றார்; குனிந்து கொண்டே
இருக்கும்வரை ஏறுபவர் ஏறிப் பார்ப்பர்;
இளைஞர்படை நிமிர்ந்தெழுந்து விறு கொண்டால்
தருக்குடையார் தலையுருளும் உடல்கள் சாயும்
தன்மானப் போர்முரசம் முழங்கும்' என்று
வெறுப்படைந்தோர் எழுச்சிகொளா முன்னர் இங்கே
விடுதலையைத் தமிழ்நாட்டிற் பரவச் செய்வீர்.

 

(29.9.1979)