பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

37



விழிநலிவு பெறுமானால் முகமெ தற்கு?
விளைபயிர்கள் கருகுமெனில் வயலெ தற்கு?
வழிபுனல்தான் அறுமெனிலோர் ஆறெ தற்கு?
வளர்ச்சியிலாப் பிண்டமெனில் கருவெ தற்கு?
மொழியடிமை யாவதெனில் நானெ தற்கு?
மூச்சில்லா உடலெதற்கு? மொழியைக் காத்துப்
பழிவிலக வாழ்வதுவே வாழ்க்கை ; இன்றேல்
பாருக்குச் சுமைகுறையச் சாதல் மேலாம்.

 

(8-3-1987)