கவியரச முடியரசன்
39
27. உறங்குந் தமிழ்மகன்
தமிழன் போலத் தன்னுயர் மானம்
உமிழ்ந்தான் ஒருவற் காண்கிலம் உலகில்;
தன்னினம் தன்மொழி தாழ்வுறல் கண்டும்
உன்னுதல் செய்யா துறங்குவன் நெடிதே!
தந்தை தொகுத்ததே தனக்குரி மைப்பொருள்
என்றதை ஓம்பிடல் ஒன்றே குறியுளன்;
முந்தையர் தொகுத்த முத்தமிழ்ச் செல்வம்
வெந்தழல் வீழினும் வெறுமனே இருப்பன்;
உரிமை தனக்கும் உண்டெனக் கருதாப்
பெருமை யுடையன் பெயரால் தமிழன்!
தன்மொழி தாழ்வுறின் தன்னுயர் மானம்
புன்மை யுற்றதென் றெண்ணுதல் செய்யான்;
கடவுள் வழிபடப் புகுவோன் கால்கழி
நடையன் மீதே நாட்டம் வைப்பன்
கடவுளின் மேம்படக் காலணி கருதுவோன்
இடமுடைக் கோவிலுள் ஈடிலாத் தாய்மொழி
இகழ்வுறல் கண்டும் கவலாதிருப்பன்;
உயர்தனிச் செம்மொழிஎன் றோதிடும் மொழியில்
அயன்மொழிச் சொல்லும் ஆங்கில எழுத்தும்
பெயவிழை வோரிவண் பேசினர் எழுதினர்
மயலுறு தமிழனும் மயங்கினன் ஒப்பினன்;
உறங்குந் தமிழ்மகன் உணர்ச்சிதான் என்னே!
அரங்கம் ஏறி ஆர்ப்பொலி எழுப்பிசைச்
கரங்கள் கேட்டவை தெரிந்தவன் போலக்
கையுங் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவையின் ஆட்டுவன் தலையை;
பொருளும் ஓரான் உணர்வுங் காணான்
மருளன் பிறமொழி இசையில் மயங்கினன்;
பழுத்த வளமைப் பைந்தமிழ் மொழியை
இழித்தும் பழித்தும் எள்ளி யுரைத்தும்
கையொலி பெறுதல் காணுதும் ஈங்கே
பொய்யிலை மேடையிற் புகுந்தவர் செயலிது;
எள்ளிய மடவனை ஈன்றதாய் யாவள்?