இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40
தாய்மொழி காப்போம்
தமிழ்மகள் எனினும் தகவிலான் எள்ளினன்;
கயவன் மொழியால் கையொலி எழுப்பும்
பயனிலா மகனும் பைந்தமிழ் மகனே;
யாதுரை புகலினும் பேதைமை நீங்கிலன்
வேதனைக் கடலுள் வீழ்ந்ததெம் முளமே;
தன்மொழி தாழ்வுறல் கண்டும் தமிழ்மகன்
உன்னுதல் செய்யா துறங்குவன் நெடிதே.
23-9-1975