பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

தாய்மொழி காப்போம்



மடம்படுவாய்! பிறமொழிக்கே இசைய ரங்கில்
மதிப்பளிப்பாய்! இசைபாடி முடிக்கும் போதில்
இடந்தருவாய் தமிழுக்கும்; ஒன்றி ரண்டே
இசைத்திடுவாய் உதிரியெனப் பெயருஞ் சூட்டி;
நடந்துவரும் உண்மையிது; கேட்டுக் கேட்டு
நைந்தமனம் தமிழ்வேண்டும் என்று சொன்னால்
அடகெடுவாய்! ஏதேதோ அலறு கின்றாய்
அடிமைமனப் பித்தெல்லாம் தணிவ தென்றோ?

(பாரதி நினைவுநாள் கவியரங்கம் 11.09.1976)